திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1723 | பெரிய திருமொழி || (8-8–வானோர் அளவும்) (திரு கண்ணபுரம் 8) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (வடித்த வாயை உடைய மழுவே ஆயுதமாக வந்து தோன்றி இருபத்தொரு படி கால் பூமி நெளியும்படியாக வந்து தோன்றின –ஷத்ரிய குலத்தை அறுத்துப் பொகட்ட வலியை உடைய ஸ்ரீ சர்வேஸ்வரனை) 6 | வடிவாய் மழுவே படையாக வந்து தோன்றி மூ வெழு கால்
படியார் அரசு களை கட்ட பாழியானை அம்மானை
குடியா வண்டு கொண்டு உண்ணக் கோல நீலம் மட்டுகுக்கும்
கடியார் புறவில் கண்ண புரத்து அடியேன் கண்டு கொண்டேனே –8-8-6 | பதவுரை Show / Hideவடி வாய், Vadi Vaai - கூர்மை பொருந்திய வாயையுடைய (- (அடியேன் கண்டுகொண்டேன்-.)) மழுவே, Mazhuve - கோடாலியையே படை ஆக, Padai Aaga - ஆயுதமாகக் கொண்டு வந்து தோன்றி, Vandhu Thondri - (பரசுராமனாய்த்) திருவவதரித்து மூ எழுகால், Moo Ezhugaal - இருபத்தொரு தலைமுறையளவும் படி, Padi - பூமியில் ஆர், Aar - நிறைந்திருக்கிற அரசு, Arasu - க்ஷத்ரியர்களாகிற களை, Kalai - விரோதிகளை கட்ட, Katta - தொலைத்த பாழியானை, Paazhiyaanai - மிடுக்குடையனான அம்மானை, Ammaanai - எம்பெருமானை,- வண்டு, Vandu - வண்டுகளானவை குடி ஆ, Kudi Aa - குடும்பமாக கொண்டு உண்ண, Kondhu Unna - (மதுவை) எடுத்துப் பருகும்படியாக கோலம் நீலம், Kolam Neelam - அழகிய நீலோற்பல மலர்கள் மட்டு, Mattu - மதுவை உகுக்கும், Ugukkum - பெருகச்செய்யப் பெற்ற கடி ஆர் புறவின், Kadi Aar Puravin - பரிமளம் மிக்க சுற்றுப் பிரதேசங்களையுடைய கண்ணபுரத்து, Kannapurathu - திருக்கண்ணபுரத்தில் |