திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1715 | பெரிய திருமொழி || (8-7–வியமுடை) (திரு கண்ணபுரம் 7) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (பூமிப் பரப்பை அளந்து கொண்ட திருவடிகள்-சங்கைஸ் ஸூ ராணாம் -என்கிறபடியே அவற்றை எல்லாரும் ஒக்க இருந்ததே குடியாக ஆஸ்ரயிக்க- ஸ்ரீ பெரிய பிராட்டியார் விரும்பி அணையா நின்றுள்ள பெரிய வரை போன்று இருந்த மார்வை உடையவர்) 8 | படி புல்கு மடி யிணைப் பலர் தொழ மலர் வைகு
கொடி புல்கு தட வரை யகலமது டையவர்
முடி புல்கு நெடு வயல் படை செல வடி மலர்
கடி புல்கு கண புர மடிகள் தமிடமே –8-7-8 | பதவுரை Show / Hideமுடி புல்கு, Mudi Pulgu - நாற்று முடிகளோடு கூடியிருக்கிற நெடு வயல், Nedu Vayal - விசாலமான கழனிகளிலே படை, Padai - கலப்பைகளை செல, Sela - செலுத்தும்போது அடி, Adi - கால்பட்ட மலர், Malar - (தாமரை முதலிய) பூக்களானவை கடி புல்கு, Kadi Pulgu - பரிமளத்தைப் புறப்பட விடப்பெற்ற கணபுரம், Kanapuram - திருக்கண்ணபுரம்;- பலர் தொழ, Palvar Thozha - பல பக்தர்கள் வணங்கும்படியாக படி புல்கும் அடி இணை உடையவர், Padi Pulgum Adi Inai Udaiyavar - பூமியை யளாவிய திருவடியிணையை யுடையவரும் மலர் வைகு, Malar Vaiku - தாமரைமலரில் பொருந்திய கொடி, Kodi - கொடிபோன்ற பெரிய பிராட்டியார் புல்கு, Pulku - அணையப்பெற்ற தடவரை அகலம் அது உடையவர், Tadavarai Akalam Adhu Udaiyavar - பெரிய மலைபோன்ற திருமார்பை யுடையவருமான அடிகள் தம், Adigal Tham - ஸ்வாமியினுடைய இடம், Idam - திவ்யதேசமாம் |