திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1703 | பெரிய திருமொழி || (8-6–தொண்டீர்) (திரு கண்ணபுரம் 6) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஸ்ரீ நப்பின்னை பிராட்டிக்கு வல்லபனுமாய் – முன் கறுத்து திண்ணியதான தாளை உடைய குவலயா பீடத்தை அநாயாசேன முறித்தானூர்) 6 | வருந்தாது இரு நீ மட நெஞ்சே நம் மேல் வினைகள் வாரா முன்
திருந்தா வரக்கர் தென்னிலங்கைச் செந்தீ யுண்ணச் சிவந்தொரு நாள்
பெருந்தோள் வாணற்க்கு அருள் புரிந்து பின்னை மணாளனாகி முன்
கருந்தாள் களிறு ஓன்று ஒசித்தானூர் கண்ண புரம் நாம் தொழுதுமே –8-6-6 | பதவுரை Show / Hideமட நெஞ்சே, Mada Nenje - ஸாதுவான நெஞ்சே! (- (ஊர், கண்ணபுரம் நாம், தொழுதும்-)) நீ வருந்தாது இரு, Nee Varundhaathu Iru - நீ வருத்தப்படாமலிரு; நம் மேல், Nam Mel - நம்மிடத்து வினைகள், Vinaigal - பாவங்களின் பலன் ஒன்றும் வாரா, Vaaraa - வந்து சேரமாட்டாது; (ஏனென்றால்) முன், Mun - முன்னே திருந்தா அரக்கர், Thirundhaa Arakkar - திருந்தாமலிந்த ராக்ஷஸர்களின் ஊராகிய தென் இலங்கை, Then Ilangai - தென்னிலங்காபுரியை செம் தீ உண்ண, Sem Thee Unna - சிவந்த நெருப்பு ஆக்ரமித்து உண்ணும்படியாக சிவந்து, Sivandhu - சீற்றங்கொண்டவனும் ஒரு நாள், Oru Naal - மற்றொருகாலத்தில் பெரு தோள் வாணற்கு, Peru Thol Vaanarku - பெரிய தோள்களையுடைய பாணாஸுரன் விஷயத்தில் அருள் புரிந்து, Arul Purindhu - (உயிரைக் கவராது விட்டிடுகை யாகிற) கிருபையைச் செய்தருளினவனும் பின்னை மணாளன் ஆகி, Pinnai Manaalan Aagi - நப்பின்னைப் பிராட்டிக்கு நாதனானவனும் முன், Mun - முன்பொருகால் கரு தாள், Karuthaal - வலிமையுள்ள கால்களையுடைய களிறு ஒன்று, Kaliru Ondru - (குவலயாபீடமென்கிற) ஒரு யானையை ஒசித்தான், Osiththaan - தொலைத்தவனுமான பெருமானுடைய |