திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1696 | பெரிய திருமொழி || (8-5–தந்தை காலில்) (திரு கண்ணபுரம் 5) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (கண்டத்துக்கு எல்லாம் பாத்த்ய கோடியிலே அந்வயிக்கும் படி மகா பாபத்தை பண்ணின என்னுடைய தரமி லோபத்தை பண்ணுகையிலே ஒருப்படா நின்றது) 9 | கனம் செய் மா மதிள் கண புரத் தவனொடும் கனவினில் அவன் தந்த
மனம் செய் இன்பம் வந்து உள் புக வெள்கி என் வளை நெக விருந்தேனை
சினம் செய் மால் விடைச் செறு மணி யோசை என் சிந்தையைச் சிந்துவிக்கும்
அனந்தல் அன்றிலினிரி குரல் பாவியேன் ஆவியை யடுகின்றதே –8-5-9 | பதவுரை Show / Hideகனம் செய், Kanam Sei - திண்ணிதாகச் செய்யப்பட்டுள்ள மா மதிள், Maa Madil - பெரிய திருமதில்களையுடைத்தான கணபுரத்து, Kanapurathu - திருக்கண்ணபுரத்திலெழுந்தருளியிருக்கிற அவனொடும், Avanodum - அப்பெருமானோடு கூடியிருப்பதாக கனவினில், Kanavinil - ஸ்வப்நத்திலே அவன் தந்த, Avan Thanda - அப்பெருமான் கொடுத்த மனம் செய் இன்பம், Manam Sei Inbam - மாநஸிகமாத்ரமான இன்பமானது வந்து உள்புக, Vandhu Ulpuka - நினைவுக்குவர (அத்தாலே) எள்கி, Elgi - ஈடுபட்டு என் வளை நெக இருந்தேனை, En Valai Nega Irundhenai - என் கைவளை கழலும்படி யிருக்கிறவென்னை சினம் செய், Sinam Sei - கோவங்கொண்ட மால் விடை, Maal Vidai - பெரிய விருஷபத்தினுடைய செறு மணி, Seru Mani - க்ரூரமான மணியினுடைய ஓசை, Osai - த்வநியானது என் சிந்தையை, En Sindhaiyai - எனது நெஞ்சை சிந்துவிக்கும், Sindhuvikkum - சிதிலமாக்குகின்றது; அனந்தல், Anandhal - உறக்கங்கொண்டிருக்கின்ற அன்றிலின், Anrilin - அன்றிற்பறவையினுடைய அரி குரல், Ari Kural - தழுதழுத்த பேச்சானது பாவியேன், Paviyen - பாவியான என்னுடைய ஆவியை, Aaviyai - உயிரை அடுகின்றது, Adhigindrathu - ஹிம்ஸிக்கின்றது. |