திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1671 | பெரிய திருமொழி || (8-3–கரையெடுத்த) (திரு கண்ணபுரம் 3) - (தலைமகளைப் பிரிந்த தலைமகள் இரங்கிக் கூறுதல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (இரண்டு எண்ண ஒண்ணாத படி நிர்விவரமாய் இருக்கிற மருதுகள் முறிந்து விழும்படியாக போன முக்தனுக்கு என்னுடைய ஸ்லாக்கியமான வளையை இழந்தேன்) 4 | கணம் மருவும் மயில் அகவும் கடி பொழில் சூழ் நெடு மறுகில்
திணம் மருவும் கன மதிள் சூழ் திருக் கண்ண புரத் துறையும்
மணம் மருவும் தோள் ஆய்ச்சி யார்க்கப் போய் உரலோடும்
புணர் மருதம் இற நடந்தாற்க்கு இழந்தேன் என் பொன் வளையே –8-3-4 | பதவுரை Show / Hideகணம் மருவு, Kanam Maruvu - திரள் மிக்கிருந்துள்ள (- (திருக்கண்ணபுரத்து, உறையும்) (என் பொன் வளை இழந்தேன்-.)) மயில், Mayil - மயில்களானவை அகவு, Akavu - கூத்தாடப்பெற்ற கடி பொழில் சூழ், Kadi Pozhil Soozh - மணம்மிக்க சோலைகளாற் சூழப்பட்டதாய் நெடு மறுகில், Nedu Marugil - பெரிய திருவீதிகளையுடைத்தாய் திணம் மருவு, Thinam Maruvu - திடம் பொருந்திய கனம், Kanam - கனகமயமான மதிள், Mathil - திருமதிள்களாலே சூழ், Sool - சூழப்பட்டதான மணம் மருவு தோள் ஆய்ச்சி, Manam Maruvu Thol Aaychchi - பரிமளம் பொருந்திய தோள்களை யுடையளான இடைச்சி ஆர்க்க, Aarkka - (தாம்பினால்) கட்ட உரலோடும் போய், Uralodum Poi - உரலோடு கூடச் சென்று புணர் மருதம், Punar Marutham - இரட்டை மருதமரங்கள் இற, Ira - இற்று முறிந்து விழும்படி நடந்தாற்கு, Nadandaarikku - நடைகற்ற பெருமானுக்கு |