திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 1624 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
1624பெரிய திருமொழி || (7-8–செங்கமலம்) (திருவழுந்தூர் 4) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஒரு கொலை அம்பாலே எய்து அவனை அழித்து விரோதி போக்கப் பெற்றோம் -ஆஸ்ரிதர்களும் குடி இருப்புப் பெற்றார்கள் – என்று அவர்களுக்கு உகவக் கடவ உகப்பை தான் உகந்த ஸ்ரீ சர்வேஸ்வரன் கிடீர்) 7
பந்தணைந்த மெல் விரலாள் சீதைக்காகிப் பகலவன் மீது இயங்காத இலங்கை வேந்தன் அந்தமில் திண் கரம் சிரங்கள் புரண்டு வீழ அடு கணையால் எய்து உகந்த வம்மான் காண்மின் செந்தமிழும் வடகலையும் திகழ்ந்த நாவர் திசை முகனே யனையவர்கள் செம்மை மிக்க அந்தணர் தம் ஆகுதியின் புகையார் செல்வத் தணி யழுந்தூர் நின்றுகந்த வமரர் கோவே –7-8-7
பதவுரை Show / Hide
செம் தமிழும், Sem Tamizhum - செவ்விய தமிழ்ப்பாஷையும் (- அணி அழுந்தூர் நின்று உகந்த அமரர் கோ-; (யாவனென்னில்;))
வடகடலையும், Vadakadalaikum - ஸம்ஸ்க்ருத பாஷையும்
திகழ்ந்த, Thigalntha - விளங்குகின்ற
நாவர், Navar - நாக்கையுடையவர்களும்
திசை முகனை அனையவர்கள், Thisai Mughanai Anaiyavargal - (தனித்தனி) பிரமனை யொத்தவர்களுமான
செம்மை மிக்க அந்தணர் தம், Semmai Mikka Andhanar Tham - நற்குணங்கள் நிறைந்த ப்ராஹ்மணர்களது
ஆகுதியின் புகை ஆர், Aaguthin Pugai Aar - ஹோம்ஞ்செய்வதனால் தோன்றுகின்ற புகை நிரம்பப்பெற்றுள்ள
செல்வத்து, Selvathu - சிறப்பையுடைய
பந்து அணைந்த மெல் விரலாள் சீதைக்கு ஆகி, Pandhu Anaindha Mel Viralal Seethaikku Aagi - பந்து பொருந்திய மெல்லிய கை விரல்களையுடைய சீதையின் நிமித்தம்
மீது பகலவன் இயங்காத இலங்கை வேந்தன், Meethu Pakalavan Iyangaadha Ilangai Vendan - (தனக்கு நேராக) மேலிடத்திலே (அச்சத்தினால்) ஸூர்யனும் ஸஞ்சரிக்கமாட்டாத இலங்கைக்கு அரசனான இராவணனது.
அந்தம் இல் திண் கரம் சிரங்கள், Andham Il Thin Karam Sirangal - அழிவில்லாத வலிய தோள்களும் தலைகளும்
புரண்டு வீழ, Purandu Veela - (அறுபட்டுக்)கீழ் விழுந்து புரளும்படி
அடு கணையால், Adu Kanaiyaal - கொல்லுந் தன்மையுள்ள அம்பினால்
எய்து, Eydhu - பிரயோகித்து
உகந்த, Ugantha - மகிழ்ந்த
அம்மான், Ammaan - தலைவனாவான்.