திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 1605 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
1605பெரிய திருமொழி || (7-6–சிங்கமதாய்) (திருவழுந்தூர் 2) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (முது நான்மறை உண்டு -பாசி பூத்த வேதம் –அது திரு வீதிகள் தோறும் திரைக் கிளப்பத்தை உடைய கடல் போலே கோஷியா நின்றுள்ள ஸ்ரீ தென் அழுந்தையில் மன்னி நின்ற – சகல கலைகளாலும் புருஷார்த்தமாக பிரதிபாதிக்கப் பட்டவனைக் கண்டு கொண்டு என் சர்வ அபேஷிதங்களையும் பெற்று ஹ்ருஷ்டன் ஆனேன்) 8
நிலையாளாக வென்னை உகந்தானை நிலமகள் தன் முலையாள் வித்தகனை முது நான்மறை வீதி தோறும் அலையாரும் கடல் போல் முழங்கும் தென் அழுந்தையில் மன்னி நின்ற கலையார் சொற்பொருளைக் கண்டு கொண்டு களித்தேனே –7-6-8
பதவுரை Show / Hide
என்னை, Ennai - என்னை (- (தென் அழுந்தையில் மன்னி நின்ற -;) (கண்டுகொண்டு களித்தேன்-.))
நிலை ஆள் ஆக, Nilai Aal Aaga - நிலைநின்ற அடியவனாக
உகந்தானை, Uganthaanai - உகந்து திருவுள்ளம் பற்றினவனும்
நிலம் மகள் தன், Nilam Magal Than - பூமிப்பிராட்டியினுடைய
முலை, Mulai - திருமுலைத்தடங்களை
ஆள், Aal - ஆளவல்ல
வித்தகனை, Viththakanai - ஸமர்த்தனும்
வீதி தொறும், Veethi Thorum - தெருக்கள் தோறும்
முது நால் மறை, Muthu Naal Marai - புராதனமான நால் வேதங்களும்
அலை ஆரும் கடல் போல் முழங்கும், Alai Aarum Kadal Pol Muzhangu - அலைகள் நிரம்பிய கடல் போலப் பெருமுழக்கம் செய்யப்பெற்ற
கலை ஆர் சொல் பொருளை, Kalai Aar Sol Porulai - சாஸ்த்ரங்களில் நிறைந்துள்ள சொற்களுக்குப் பொருளாயிருப்பவனுமான பெருமானை