திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 1593 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
1593பெரிய திருமொழி || (7-5–தந்தை காலில்) (திருவழுந்தூர் 1) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (என்னைப் பெறுகையால் வந்த அலாப்ய லாபம்தன்னது என்னும் இடம் தோற்ற ஸ்மிதம் பண்ணி – தான் செய்தது விலக்காத படியான தசையை எனக்கு பிறப்பித்து-என் அருகே வந்து நின்று அது சாத்மித்தவாறே ஹிருதயத்திலே வந்து புகுந்து இனி இவருக்கு ஒரு போக்கு இல்லை என்று தோற்ற நிற்கிறவர்) 6
ஏடிலங்கு தாமரை போல் செவ்வாய் முறுவல் செய்தருளி மாடு வந்து என் மனம் புகுந்து நின்றார் நின்ற ஊர் போலும் நீடு மாடத் தனிச் சூலம் போழ்கக் கொண்டல் துளி தூவ ஆடல் அரவத் தார்ப்போவா அணியூர் வீதி அழுந்தூரே –7-5-6
பதவுரை Show / Hide
நீடு மாடம், Needu Maadam - (நாட்டப்பட்ட) உயர்ந்த மாடங்களில் (- (அணி ஆர் வீதி அழுந்தூர்))
தனி சூலம், Thani Soolem - ஒப்பற்ற சூலமானது
போழ்க, Pozhga - (மேகத்தின் வயிற்றைக்) கீண்ட வளவிலே
கொண்டல், Kondhal - மேகமானது
துளி தூவ, Thuli Thoova - மழை பொழியப் பெற்றதும்
ஆடல் அரவத்து ஆர்ப்பு ஓவா, Aadal Aravathu Aarppu Ovaa - கூத்தாட்டவொலிகளினாலுண்டான கோலாஹலம் ஓயாமலிருக்கப்பெற்றதுமான
ஏடு இலங்கு தாமரை போல், Aedu Ilangu Thaamarai Pol - இதழ்விளங்குகின்ற தாமரைப்பூ மலர்ந்தாலொப்ப
செம் வாய் முறுவல் செய்தருளி, Sem Vaai Muruvai Seitharuliy - சிவந்த திருப்பவளத்தினால் புன்முறுவல் செய்துகொண்டு
மாடு வந்து, Maadu Vandu - என் பக்கலிலே வந்து
என்மனம் புகுந்து நின்றார், Enmanam Pugundhu Nindrar - என்மனத்திலே புகுந்து நின்றபெருமாள்
நின்ற, Nindra - நித்யவாஸம் பண்ணப்பெற்ற
ஊர் போலும், Oor Polum - திவ்ய தேசமாகும்.