திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1590 | பெரிய திருமொழி || (7-5–தந்தை காலில்) (திருவழுந்தூர் 1) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (இந்த்ராதிகள் உடைய வஜ்ரத்துக்கு அழியாத பையல் தலைகளை மனிச்சுக்கு ஏகாந்தமான மிடுக்காலே அழித்தான் ஆய்த்து) 3 | செம்பொன் மதிள் சூழ் தென்னிலங்கைக்கு இறைவன் சிரங்கள் ஐ இரண்டும்
உம்பர் வாளிக்கு இலக்காக வுதிர்த்த வுரவோனூர் போலும்
கொம்பிலார்ந்த மாதவி மேல் கோதி மேய்ந்த வண்டினங்கள்
அம்பராவும் கண் மடவார் ஐம்பால் அணையும் அழுந்தூரே –7-5-3 | பதவுரை Show / Hideகொம்பில் ஆர்ந்த, Kombil Aarntha - கிளைகளினால் நிறைந்திருக்கிற மாதவி மேல், Maadhavi Mel - குருக்கத்தி மரத்தின் மேலே கோதி, Kothi - (தளிர்களைக்) கீறி மேய்ந்த, Meyndha - மதுபானம் பண்ணின வண்டு இனங்கள், Vandu Inangal - வண்டுத்திரள்கள் அம்பு அராவும் கண்மடவார், Ambu Aravum Kanmadavaar - அம்புபோன்ற கண்களை உடையரான மாதர்களினுடைய ஐம்பால், Aimpal - கூந்தலின் மீது அணையும், Anaiyum - வந்துசேரப் பெற்ற அழுந்தூர், Azhundhoor - திருவழுந்தூர்,- செம் பொன் மதில் சூழ், Sem Pon Mathil Soozh - செம்பொன் மயமான மதில்களாலே சூழப்பட்ட தென் இலங்கைக்கு, Then Ilangaiyku - தென்னிலங்காபுரிக்கு இறைவன், Iraivan - நாயகனான இராவணனது சிரங்கள் ஐ இரண்டும், Siralgal Ai Irandum - பத்து தலைகளையும் உம்பர்வாளிக்கு, Umbarvaaliku - ப்ரஹ்மாஸ்திரத்திற்கு இலக்கு ஆக, Ilakku Aaga - வக்ஷியமாக்கி உதிர்த்த, Uthirtha - அறுத்தொழித்த உரவோன், Uravon - பொருமிடுக்கனான பெருமானுடைய ஊர் போலும், Oor Polum - திவ்யதேசமாகும். |