திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 1561 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
1561பெரிய திருமொழி || (7-2–புள்ளாய் ஏனமுமாய்) (திரு நறையூர் 9) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (சேராச் சேர்த்தியாக என்னுடைய ஹிருதயத்திலே வந்து புகுந்து அவ் வாலந்தளிர் அளவன்றிக்கே ஸ்ரீ பரம பதம் போலே இடம் பெற இருந்து என்னை உனக்காக்கிக் கொண்ட இம் மகோ உபகாரத்தை அறியாதே நான் க்ருத்க்னனாய் இருக்கிறேன் அல்லேன் – அவ்விடை யாட்டமும் அறிந்தே இருக்கிறேன் -உனக்கு உறைவிடம் இல்லாமை தான் செய்தாயோ நீ – உனக்கு அசங்குசிதமாக வர்த்திகைக்கு ஒரு ஸ்தானம் இல்லையோ -இத் தேசத்தை உடைய உனக்கு) 4
சிறியாய் ஓர் பிள்ளையுமாய் யுலகு உண்டு ஓர் ஆலிலை மேல் உறைவாய் என் நெஞ்சின் உள்ளே உறைவாய் உறைந்தது தான் அறியாது இருந்தறியேன் அடியேன் அணி வண்டு கிண்டும் நறைவாரும் பொழில் சூழ் நறையூர் நின்ற நம்பீயோ –7-2-4
பதவுரை Show / Hide
அணி வண்டு, Ani Vandu - அழகிய வண்டுகள் (- (நறையூர், நின்ற நம்பீயோ!- ;))
கிண்டும், Kindum - குடையப்பெற்றதும்
நறை வாரும், Nirai Vaarum - தேன் பெருகப்பெற்றதுமான
பொழில், Pozhil - சோலையாலே
சூழ், Sool - சூழப்பட்ட
சிறியாயோர் பிள்ளையும் ஆய், Siriyaayor Pillaiyum Aay - மிகச் சிறுகுழந்தையாய்
உலகு உண்டு, Ulaku Undu - உலகங்களை உட்கொண்டு
ஓர் ஆல் இலை மேல், Or Aal Ilai Mel - ஒரு ஆலந்தளிரிலே
உறைவாய், Uraivaay - பொருந்தியிருந்தவனே!
என் நெஞ்சின் உள்ளே உளைவாய், En Nenjin Ullae Ulaivaay - எனது நெஞ்சுக்குள்ளே வஸிப்பவனே!
உறைந்தது தான், Uraindhadhu Thaan - (நீ இப்படி என்னெஞ்சினுள்ளே) வாஸஞ்செய்தருள்வதை
அடியேன், Adiyen - அடியேன்
அறியா திருந்தறியேன், Ariyaa Thirundhariyeen - தெரிந்துகொள்ளாமலிருக்கவில்லை