திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1530 | பெரிய திருமொழி || (6-9–பெடையடர்த்த) (திரு நறையூர் 6) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஸ்ரீ நம்பி மூத்த பிரானுக்கு பின் பிறந்தவன் –பூமிப் பரப்போடு கூட தயிரையும் வெண்ணெயும் அமுது செய்தவனுடைய திருவடிகளை அடை நெஞ்சே) 3 | சுளை கொண்ட பலங்கனிகள் தேன் பாயக் கதலிகளின்
திளை கொண்ட பழம் கெழுமி திகழ் சோலைத் திரு நறையூர்
வளை கொண்ட வண்ணத்தன் பின் தோன்றல் மூவுலகோடு
அளை வெண்ணெய் உண்டான் தன் அடி இணையே அடை நெஞ்சே –6-9-3 | பதவுரை Show / Hideசுளைகொண்ட, Sulaikondha - பல சுளைகளை யுடைத்தான (- (அடி இணையே நெஞ்சே! அடை -.)) பலங் கனிகள், Palang Kanigal - பலாப் பழங்களில் நின்றும் தேன் பாய, Then Paaya - தேன் பெருகப்பெற்றும், கதலிகளின், Kadaligalil - வாழைமரங்களின் திளைகொண்ட, Thilaikondha - பருத்திருந்துள்ள பழம், Pazham - பழங்கள் கெழுமு, Kezhumu - நெருங்கப்பெற்று மிருக்கிற திகழ் சோலை, Thigal Solai - விளங்குகின்ற சோலைகளையுடைய திருநறையூர், Thirunaraiyoor - திருநறையூரில்,- வளை கொண்ட வண்ணத்தன், Valai Konda Vannathan - சங்குபோல் வெளுத்த நிறமுடையனான பலராமனுடைய பின் தோன்றல், Pin Thondral - தம்பியாயும் மூ உலகோடு, Moo Ulakodu - மூன்று லோகங்களையும் அளைவெண்ணெய், Alai Vennai - தயிர் வெண்ணெயையும் உண்டான் தன், Undaan Than - அமுது செய்தவானயு மிருக்கிற எம்பெருமானுடைய |