திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1529 | பெரிய திருமொழி || (6-9–பெடையடர்த்த) (திரு நறையூர் 6) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஜனனி என்று வாசி பார்க்க மாட்டாமையாலே மிக்க பழியைத் தரித்து இருப்பானாய் முன்கை மிடுக்காலே தோன்றின படி நடந்து திரிகிற ராவணன் உடைய தலைகள் சிதறும்படியாக – எதிரிகளை அம்பாய் நலிகை அன்றிக்கே நெருப்பாக சுடுகிற அம்புகளை நடத்தினவன் உடைய) 2 | கழியாரும் கனசங்கம் கலந்தெங்கும் நிறைந்தேறி
வழியார முத்தீன்று வளம் கொடுக்கும் திரு நறையூர்
பழியாரும் விறல் அரக்கன் பரு முடிகள் அவை சிதற
அழலாரும் சரம் துரந்தான் அடி இணையே அடை நெஞ்சே –6-9-2 | பதவுரை Show / Hideகழி ஆரும், Kazhi Aarum - உப்புக்கழிகளிலே நிரம்பியிருக்கின்ற (- (அடி இணையே, நெஞ்சே! அடை-.)) கனம் சங்கம், Kanam Sangam - கனத்த சங்குகளானவை எங்கும், Engum - எல்லாவிடங்களிலும் கலந்து, Kalandhu - வந்துசேர்ந்து நிறைந்து, Niraindhu - வரிசை வரிசையாக இருந்து ஏறி, Eri - பாய்ந்து வழி ஆர, Vazhi Aara - வீதிகள் நிறையும்படியாக முத்து, Muthu - முத்துக்களை ஈன்று, Eendru - கரந்து வளம் கொடுக்கும், Valam Kodukkum - (இப்படி) செல்வமளிக்கப்பெற்ற திருநறையூர், Thirunaraiyoor - திருநறையூரில்,- பழி ஆரும், Pazhi Aarum - மிகுந்த அபவாதத்தையுடையனாய் விறல், Viral - பலிஷ்டனான அரக்கன், Arakkan - இராவணனுடைய பரு முடிகள் அவை சிதற, Paru Mudigal Avai Sidhara - பருத்த (பத்துத்) தலைகளும் சிதறும்படியாக அழல் ஆகும், Azhai Aakum - நெருப்புப்போன்ற சரம், Saram - அம்புகளை துரந்தான், Durandhaan - பிரயோகித்த பெருமானுடைய |