திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 1529 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
1529பெரிய திருமொழி || (6-9–பெடையடர்த்த) (திரு நறையூர் 6) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஜனனி என்று வாசி பார்க்க மாட்டாமையாலே மிக்க பழியைத் தரித்து இருப்பானாய் முன்கை மிடுக்காலே தோன்றின படி நடந்து திரிகிற ராவணன் உடைய தலைகள் சிதறும்படியாக – எதிரிகளை அம்பாய் நலிகை அன்றிக்கே நெருப்பாக சுடுகிற அம்புகளை நடத்தினவன் உடைய) 2
கழியாரும் கனசங்கம் கலந்தெங்கும் நிறைந்தேறி வழியார முத்தீன்று வளம் கொடுக்கும் திரு நறையூர் பழியாரும் விறல் அரக்கன் பரு முடிகள் அவை சிதற அழலாரும் சரம் துரந்தான் அடி இணையே அடை நெஞ்சே –6-9-2
பதவுரை Show / Hide
கழி ஆரும், Kazhi Aarum - உப்புக்கழிகளிலே நிரம்பியிருக்கின்ற (- (அடி இணையே, நெஞ்சே! அடை-.))
கனம் சங்கம், Kanam Sangam - கனத்த சங்குகளானவை
எங்கும், Engum - எல்லாவிடங்களிலும்
கலந்து, Kalandhu - வந்துசேர்ந்து
நிறைந்து, Niraindhu - வரிசை வரிசையாக இருந்து
ஏறி, Eri - பாய்ந்து
வழி ஆர, Vazhi Aara - வீதிகள் நிறையும்படியாக
முத்து, Muthu - முத்துக்களை
ஈன்று, Eendru - கரந்து
வளம் கொடுக்கும், Valam Kodukkum - (இப்படி) செல்வமளிக்கப்பெற்ற
திருநறையூர், Thirunaraiyoor - திருநறையூரில்,-
பழி ஆரும், Pazhi Aarum - மிகுந்த அபவாதத்தையுடையனாய்
விறல், Viral - பலிஷ்டனான
அரக்கன், Arakkan - இராவணனுடைய
பரு முடிகள் அவை சிதற, Paru Mudigal Avai Sidhara - பருத்த (பத்துத்) தலைகளும் சிதறும்படியாக
அழல் ஆகும், Azhai Aakum - நெருப்புப்போன்ற
சரம், Saram - அம்புகளை
துரந்தான், Durandhaan - பிரயோகித்த பெருமானுடைய