திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1516 | பெரிய திருமொழி || (6-7–ஆளும் பணியும்) (திரு நறையூர் 4) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (சர்வ கந்த -என்கிற -திரு மேனியிலே ஸ்வேத ஜலத்தைக் கொடுத்து மதிப்பனாய்த் திரிகிற இவன் உடைய குறையை தீரப் பெற்றோம் -என்கிற இத்தால் தான் உகந்தான் ஆய்த்து) 9 | ஆறும் பிறையும் அரவமும் அடம்பும் சடை மேல் அணிந்து உடலம்
நீறும் பூசியேறூரும் இறையோன் சென்று குறை யிரப்ப
மாறு ஒன்றில்லா வாச நீர் வரை மார்வகலத்து அளித்து உகந்தான்
நாறும் பொழில் சூழ்ந்து அழகாய நறையூர் நின்ற நம்பியே –6-7-9 | பதவுரை Show / Hideஆறும், Aarum - (கங்கையாகிற) நதியையும் (- (நறையூர், நின்ற நம்பி -.)) பிறையும், Piraiyum - சந்திகலையையும் அரவமும், Aravamum - ஸர்ப்பங்களையும் அடம்பும், Adambum - அடப்பம் பூவையும் சடைமேல் அணிந்து, Sadaimeel Anindhu - ஜடையின் மீது தரித்துக்கொண்டு உடலம், Udalam - உடம்பிலே நீறும்பூசி, Neerumpoosi - சாம்பல் பூசிக்கொண்டு ஏறு ஊரும், Eru Oorum - ரிஷபத்தின் மேலேறி நடத்துகின்ற இறையோன், Irayon - சிவபிரான் சென்று, Sendru - வந்துகிட்டி குறை இரப்ப, Kurai Irappa - தனது பிரமஹத்யா சாபம் விடுபடுமாறு பிரார்த்திக்க, வரை மார்பு அகலத்து , Varai Maarbu Akalathu - மலைபோன்ற திரூமார்பிடத்தில் நின்றும் மாறு ஒன்று இல்லா வாசம்நீர், Maaru Ondru Illaa Vaasamneer - ஒப்பற்ற பரிமளம் மிக்க (வியர்வை) நீரை அளித்து, Alithu - எடுத்துக்கொடுத்து உகந்தான், Uganthaan - திருவுள்ளமுவந்த பெருமான் நாறும் பொழில் சூழ்ந்து அழகு ஆய, Naarum Pozhil Soozhndhu Azhagu Aaya - நறுமணம்மிக்க சோலைகளால் சூழப்பட்ட அழகிய |