திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1508 | பெரிய திருமொழி || (6-7–ஆளும் பணியும்) (திரு நறையூர் 4) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (நாள் திரு நாளும் திங்கள் திரு நாளும் மாறாதே இருக்கிற ஸ்ரீ திரு நறையூரிலே நித்ய வாஸம் பண்ணுகிற ஸ்ரீ நம்பி -ஆளும் பணியும் அடியேனைக் கொண்டான்) 1 | ஆளும் பணியும் அடியேனைக் கொண்டான் விண்ட நிசாசரரை
தோளும் தலையும் துணி வெய்தச் சுடு வெஞ்சிலை வாய்ச் சரந்துரந்தான்
வேளும் சேயும் அனையாரும் வேல் கணாரும் பயில் வீதி
நாளும் விழவின் ஒலி யோவா நறையூர் நின்ற நம்பியே –6-7-1 | பதவுரை Show / Hideஅடியேனை, Adiyenai - அடியேனை ஆளும் பணியும் கொண்டான், Aalum Paniyum Kondaaan - சேஷபூதனாகவும் நித்யகிங்கரனாகவும் திருவுள்ளம் பற்றினவனும் விண்ட நிசாசரரை, Vindha Nisaacharari - பிரதிகூலரான ராக்ஷஸர்களின் தோளும் தலையும் துணிவு எய்த, Tholum Thalaiyum Thunivu Eytha - தோள்களும் தலைகளும் துண்டு துண்டாம்படியாக சுடு வெம் சிலை வாய், Sudu Vem Silai Vaai - மிகக்கடூரமான வில்லில் நின்றும் சரம், Saram - அம்புகளை துரந்தான், Durandhaan - பிரயோகித்தவனுமான பெருமான் (யாவனென்னில்) வேளும் சேயும் அனையாரும், Velaum Seyum Anaiyaarum - மன்மதனோடும் ஸுபரஹ்மண்யனோடும் ஒத்த அழகிய புருஷர்களும் வேல் கணாரும், Vel Kanaa Rum - வேல்போன்ற கண்களையுடைய மாதர்களும் பயில் வீதி, Payil Veethi - வாஸஞ்செய்யப்பெற்ற திருவீதிகளை யுடைத்தாய், நாளும், Naalum - எப்போதும் விழவின் ஒலி ஓவா, Vizhavin Oli Ovaa - உத்ஸவகோலாஹலங்கள் ஓயாதிருக்கப் பெற்றதான நறையூர், Naraiyoor - திருநறையூரில் நின்ற, Nindra - நித்யவாஸம் பண்ணகிற நம்பி, Nambi - ஸ்வாமி |