திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 1508 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
1508பெரிய திருமொழி || (6-7–ஆளும் பணியும்) (திரு நறையூர் 4) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (நாள் திரு நாளும் திங்கள் திரு நாளும் மாறாதே இருக்கிற ஸ்ரீ திரு நறையூரிலே நித்ய வாஸம் பண்ணுகிற ஸ்ரீ நம்பி -ஆளும் பணியும் அடியேனைக் கொண்டான்) 1
ஆளும் பணியும் அடியேனைக் கொண்டான் விண்ட நிசாசரரை தோளும் தலையும் துணி வெய்தச் சுடு வெஞ்சிலை வாய்ச் சரந்துரந்தான் வேளும் சேயும் அனையாரும் வேல் கணாரும் பயில் வீதி நாளும் விழவின் ஒலி யோவா நறையூர் நின்ற நம்பியே –6-7-1
பதவுரை Show / Hide
அடியேனை, Adiyenai - அடியேனை
ஆளும் பணியும் கொண்டான், Aalum Paniyum Kondaaan - சேஷபூதனாகவும் நித்யகிங்கரனாகவும் திருவுள்ளம் பற்றினவனும்
விண்ட நிசாசரரை, Vindha Nisaacharari - பிரதிகூலரான ராக்ஷஸர்களின்
தோளும் தலையும் துணிவு எய்த, Tholum Thalaiyum Thunivu Eytha - தோள்களும் தலைகளும் துண்டு துண்டாம்படியாக
சுடு வெம் சிலை வாய், Sudu Vem Silai Vaai - மிகக்கடூரமான வில்லில் நின்றும்
சரம், Saram - அம்புகளை
துரந்தான், Durandhaan - பிரயோகித்தவனுமான பெருமான் (யாவனென்னில்)
வேளும் சேயும் அனையாரும், Velaum Seyum Anaiyaarum - மன்மதனோடும் ஸுபரஹ்மண்யனோடும் ஒத்த அழகிய புருஷர்களும்
வேல் கணாரும், Vel Kanaa Rum - வேல்போன்ற கண்களையுடைய மாதர்களும்
பயில் வீதி, Payil Veethi - வாஸஞ்செய்யப்பெற்ற திருவீதிகளை யுடைத்தாய்,
நாளும், Naalum - எப்போதும்
விழவின் ஒலி ஓவா, Vizhavin Oli Ovaa - உத்ஸவகோலாஹலங்கள் ஓயாதிருக்கப் பெற்றதான
நறையூர், Naraiyoor - திருநறையூரில்
நின்ற, Nindra - நித்யவாஸம் பண்ணகிற
நம்பி, Nambi - ஸ்வாமி