திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 1493 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
1493பெரிய திருமொழி || (6-5–கலங்க) (திரு நறையூர் 2) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (தான் மாதுலனாய் கண்ணநீரை விழ விட்டு துக்கம் கொண்டாடுவானாக மலை முறிந்து விழுமா போலே-அது விழும்படி பொருத ஆண் பிள்ளை வர்த்திக்கிற தேசம்) 6
பகுவாய் வன் பேய் கொங்கை சுவைத்து ஆர் உயிர் உண்டு புகுவாய் நின்ற போதகம் வீழப் பொருதானூர் நெகுவாய் நெய்தல் பூ மது மாந்திக் கமலத்தின் நகுவாய் மலர் மேல் அன்னம் உறங்கும் நறையூரே –6-5-6
பதவுரை Show / Hide
பகு வாய், Paghu Vaai - பெரிய வாயை யுடையவளும்
வன, Vana - மனக்கொடுமையை யுடையவளுமான
பேய், Pey - பேய்ச்சியாகிய பூதனையினுடைய
கொங்கை, Kongai - ஸ்தனத்தை
சுவைத்து, Suvaiththu - உறிஞ்சி
ஆர் உயிர் உண்டு, Aar Uyir Undu - (அவளது) அருமையான உயிரை முடித்தவனும்,
புகு வாய், Puku Vaai - (கம்ஸ னரண்மையினுள்ளே) நுழைய வேண்டிய வாசலில்
நின்ற, Nindra - (மதமூட்டி) நிறுத்தப்பட்டிருந்த
போதகம், Pothagam - (குவலயாபீடமென்னும்) யானை
வீழ, Veela - சாகும்படியாக
பொருதான், Porudhaan - போர்புரிந்தவனுமான பெருமானுடைய
ஊர், Oor - திவ்யதேசம் (எதுவென்றால்)
அன்னம், Annam - ஹம்ஸங்களானவை
நெகு வாய் நெய்தல் பூ, Neku Vaai Neiththal Poo - அலர்ந்த வாயையுடைய (விகஸித்த) கரு நெய்தற் பூக்களிலே
மது, Madhu - தேனை
மாந்தி, Maanthi - பருகி
கமலத்தின் நகு வாய் மலர்மேல், Kamalaththin Nagu Vaai Malarmel - விரிந்த வாயையுடைய தாமரைப்பூக்களிலே
உறங்கும், Uringum - கண்வளரப்பெற்ற
நறையூர், Naraiyoor - திருநறையூர்