திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1484 | பெரிய திருமொழி || (6-4–கண்ணும் சுழன்று) (திரு நறையூர் 1) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (வேதத்தில் வாசனை போய் ஆசாரத்திலே ஏதேனும் ஓர் வைகல்யம் உண்டாய் இருக்கை அன்றிக்கே ஆசார பிரதானவர்கள் வர்த்திக்கிற தேசத்தை –நாமும் போய் ஆஸ்ரயிப்போம்) 7 | வில்லேர் நுதலார் வேட்கையை மாற்றிச் சிரித்து இவன்
பொல்லான் திரைந்தான் என்னும் புறனுரை கேட்பதன் முன்னம்
சொல்லார் மறை நான்கோதி யுலகில் நிலா யவர்
நல்லார் நறையூர் நாம் தொழுதும் எழு நெஞ்சமே –6-4-7 | பதவுரை Show / Hideவில் ஏர் நுதலார், Vil Aer Nuthalaar - வில்போன்று அழகிய நெற்றியையுடையரான மாதர் (- (நாம் தொழுதும், நெஞ்சமே! எழு-.)) வேட்கையை மாற்றி, Vedkaitai Maatri - (முன்பு வைத்திருந்த) ஆசையைத் தவிர்த்து சிரித்து, Siriththu - பரிஹாஸம்பண்ணி இவன் பொல்லான், Ivan Pollaan - ‘இந்தக் கிழவன் பொல்லாதவன்’ திரைந்தான், Thiraindhaan - சதை சுருங்கினான் என்னும், Ennum - என்று (இகழ்ந்து) சொல்லும்படியான புறன் உரை, Puran Urai - இழிவான வார்த்தைகள கேட்பதன் முன், Kaetpathan Mun - கேட்கநேருவதற்கு முன்னே,- சொல் ஆர், Sol Aar - பதங்கள் நிரம்பிய நான்கு மறை, Naanthu Marai - நான்கு வேதங்களையும் ஓதி, Othi - அதிகரித்து உலகில், Ulagil - இவ்வுலகில் நிலாயவர், Nilayavar - (அவ்வேதங்களை) ஸ்தாபிக்கு மவர்களாய் நல்லார், Nallaar - நல்லொழுக்கமுடையரான வைதிகர்வாழ்கிற நறையூர், Naraiyoor - திருநறையூரை |