திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1478 | பெரிய திருமொழி || (6-4–கண்ணும் சுழன்று) (திரு நறையூர் 1) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (இப்படி ஜகதா காரணனாய் வேத பிரதிபாத்யன் ஆனவன்-சர்வம் கல்விதம் ப்ரஹ்ம-என்று இறே-சொல்லுகிறது – அந்த வேதோக்தமான சர்வ கர்ம சமாத்ராத்யன் ஆனவன் சம்சாரிகள் உடைய ரஷணத்துக்கு உறுப்பாக கிட்டி வர்த்திக்கிற ஸ்ரீ திரு நறையூரை ஆஸ்ரயிப்போம் ஒருப்படு என்று திரு உள்ளத்தோடு கூட்டுகிறார்) 1 | கண்ணும் சுழன்று பீளையோடு ஈளை வந்து ஏங்கினால்
பண்ணின் மொழியார் பைய நடமின் என்னாத முன்
விண்ணும் மலையும் வேதமும் வேள்வியும் ஆயினான்
நண்ணு நறையூர் நாம் தொழுதும் எழும் நெஞ்சமே –6-4-1 | பதவுரை Show / Hideபீளையோடு, Peelayodu - பிளிச்சையோடு கூட (- (திரஸ்கரித்துச்) சொல்வதற்கு முன்,-) கண்ணம் சுழன்று, Kannam Suzhandru - கண்கள் சுழலமிட்டு ஈளை வந்து, Eilai Vandu - கோழைமேலிட்டு ஏங்கினால், Aenginaal - தளர்ச்சியடைந்தால், (அப்போது) பண் இன் மொழியார், Pan In Mozhiyaar - இசைப்பாட்டுபோல் இனிமையான வாய் மொழியை யுடையமாதர் (நம்மை நோக்கி) பைய நடமின் என்னாத முன், Paiya Nadamin Ennaadha Mun - ‘மெல்ல நடந்து செல்லுங்கள்’ என்று விண்ணும், Vinnum - ஆகாசமும் மலையும், Malaiyum - பர்வதங்களும் வேதமும், Vedhamum - வேதங்களும் வேள்வியும், Velviyum - யாகங்களும் ஆயினான், Aayinaan - தானேயாயிருக்கு மெம்பெருமான் நண்ணும், Nannum - விரும்பியுடையுமிடமான நறையூர், Naraiyoor - திருநறையூரை நெஞ்சமே, Nenjamai - ஓ மனமே! நாம் தொழுதும், Naam Thozhudum - நாம் வணங்குவோம்; எழு, Ezhu - எழுந்திரு |