திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1474 | பெரிய திருமொழி || (6-3–துறப்பேன்) (திருவிண்ணகர் 3) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (நான் ஒரு அநந்ய கதி -என்கிறார்-இதர தேவதைகளை வாயாலே பேசேன் –-அவ்வளவே அன்றிக்கே நெஞ்சால் அவற்றுக்கு ஒரு ஆதிக்யம் உண்டாக நினையேன் ஆபாத ப்ரதீதியிலே அவற்றுக்கு ஒரு உத்கர்ஷம் உண்டாய்த் தோற்றிற்று ஆகிலும் அத்தை விச்வசியேன் – சர்வாதிகனாய் இருக்கிற நீ ஸ்ரீ திரு விண்ணகரிலே வந்து சந்நிஹிதன் ஆனாய் நீயே ஆஸ்ரயநீயன் என்று அறிவித்த பின்பு இனி உனக்கு விபூதி பூதரானார் பக்கல் பரத்வ பிரதிபத்தி பண்ணேன்) 7 | வேறே கூறுவது உண்டு அடியேன் விரித்து உரைக்கு
மாறே நீ பணியா தடை நின் திரு மனத்து
கூறேன் நெஞ்சு தன்னால் குணம் கொண்டு மற்றோர் தெய்வம்
தேறேன் உன்னை அல்லால் திருவிண்ணகரானே –6-3-7 | பதவுரை Show / Hideவேறே, Veerae - விலக்ஷணமாக (- (திரு விண்ணகரானே!- ;) (அடியேன்-;)) கூறுவது உண்டு, Koora Vudhu Undu - விண்ணப்பஞ் செய்வதொரு வார்த்தையுண்டு; விரித்து உரைக்கும் ஆறே நீ பணியாது, Virithu Uraikkum Aarae Nee Paniyadhu - (நான்) விரிவாகக்கேட்க வேண்டும்படி நியமியாமல் நின் திருமனத்து, Nin Thirumanaththu - உன் திருவுள்ளத்தில் அடை, Aadai - ஸாரமாகக் கொண்டருள வேணும்; உன்னை அல்லால், Unnai Allaal - உன்னையொழிய மற்று ஓர் தெய்வம், Mattru Oor Deivam - வேறொரு தெய்வத்தை கூறேன், Kooraen - வாய்விட்டுச் சொல்லமாட்டேன்; குணம் கொண்டு, Gunam Kondu - (அவர்களிடத்தில்) குணவிசேஷத்தைக் கண்டாகிலும் நெஞ்சு தன்னால், Nenju Thannal - நெஞ்சினால் தேறேன், Theeraen - (அவர்களை ஆச்ரயணீயராக) விச்வஸிக்கமாட்டேன். |