திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1460 | பெரிய திருமொழி || (6-2–பொறுத்தேன்) (திருவிண்ணகர் 2) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (விபூதி த்வயத்தையும் தனக்கு பிரகாரமாக உடையனாய் இருந்து வைத்து என்னைப் பெறுகை தனக்கு தேட்டமாக வந்தான் ஆய்த்து – இன்னும் வரத்தும் போக்கும் உண்டு என்று தோற்றாதபடி ஸ்தாவர ப்ரதிஷ்டையாக இருந்தான் ஆய்த்து – அறு காத பயணத்துக்கு பொதி சோறு கொண்டு போம் விஷயம் இங்கே சந்நிஹிதம் ஆய்த்து) 3 | மானேய் நோக்கியர் தம் வயிற்றுக் குழியில் உழைக்கும்
ஊனேர் ஆக்கை தன்னை யுதவாமை உணர்ந்து உணர்ந்து
வானே மா நிலமே வந்து வந்து என் மனத்து இருந்த
தேனே நின்னடைந்தேன் திரு விண்ணகர் மேயவனே –6-2-3 | பதவுரை Show / Hideவானே மா நிலமே, Vane Maa Nilame - நித்யவிபூதிக்கும் லீலா விபூதிக்கும் நிர்வாஹகனே! (- (திரு விண்ணகர் மேயவனே!- ;)) உவந்து வந்து, Uvandu Vandu - (பரமபதத்தில் நின்றும்) உவப்போடேவந்து என்மனத்து இருந்த தேனே, Enmanaththu Irundha Thenne - என்மனத்தில் நித்யவாஸம் பண்ணுகின்ற பரமபோக்யனே! மான் ஏய் நோக்கியர்தம், Maan Aey Nokkiyartham - மானைப் போன்ற கண்ணழகையுடையரான ஸ்த்ரீகளினுடைய வயிற்றுக் குழியில், Vayittruk Kuzhiyil - கர்ப்பக்குழியில் இருந்து கொண்டு உழைக்கும், Uzhaikkum - கஷ்டப்படுமதாய் ஊன் ஏய், Oon Aey - மாம்ஸாதிகள் நிறைந்ததான ஆக்கை தன்னை, Aakkai Thannai - சரீரத்தினுடைய உதவாமை உணர்ந்து உணர்ந்து, Udhavamai Unarndhu Unarndhu - உபயோகமற்றதன்மையை நன்றாக அறிந்து நின் அடைந்தேன், Nin Adaindhen - உன்னை வந்து பற்றினேன் |