திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 1434 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
1434பெரிய திருமொழி || (5-9–கையிலங்கு) (திருப்பேர் நகர்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (சாமான்யன் என்று இடுமீடு எல்லாம் இட அமையும் -என்று இருப்பாரைப் போலே வேறு ஒரு ஹேதுவைச் சொல்லி அன்றியே இது சொல்லியே நம்மைக் கட்டுவதே என்று இசைந்து இருந்தான் ஆய்த்து) 7
வெண்ணெய் தான் அமுது செய்ய வெகுண்டு மத்தாய்ச்சி ஓச்சிக் கண்ணியார் குருங்கயிற்றால் கட்ட வெட்டென்று இருந்தான் திண்ண மா மதிள்கள் சூழ்ந்த தென் திருப் பேருள் வேலை வண்ணனார் நாமம் நாளும் வாய் மொழிந்து உய்ந்தவாறே –5-9-7
பதவுரை Show / Hide
தான், Thaan - யசோதை நோன்பு நோற்றுப் பெற்ற பிள்ளையாகிய தான்
வெண்ணெய் அமுது செய்ய, Vennai Amuthu Seyya - வெண்ணெயை (அளவில்லாதபடி திருடி) உண்டவளவிலே
ஆய்ச்சி, Aaychi - யசோதையானவள்
வெகுண்டு, Vegundu - சீற்றங்கொண்டு
மத்து ஓச்சி, Maththu Ochi - தயிர்கடையும் மத்தினால் அடிப்பதாக ஓங்கி
கண்ணி ஆர் குறுகயிற்றால் கட்ட, Kanni Ar Kurugayitral Katta - முடிச்சுகள் நிறைந்த சிறிய தாம்பினால் கட்டிவைக்க
வெட்டென்றிருந்தான், Vettenthirundhaan - இசைந்திருந்தவனும்:-
திண்ணம் மா மதிள்கள் சூழ்ந்த, Thinnam Maa Mathilgal Soozhntha - திடமான பெரிய மதிள்களாலே சூழப்பட்ட
தென் திருப்பேருள், Then Thirupperal - தென் திருப்பேர் நகரில் எழுந்தருளியிருக்கிறவனும்
வேலை வண்ணனார், Vela Vannanaar - கடல்போன்ற நிறத்தையுடையனுமான பெருமானுடைய
நாமம், Naamam - திருநாமங்களை
நாளும், Naalum - நாள்தோறும்
வாய் மொழிந்து, Vaai Mozhinthu - சொல்லி
உய்ந்த ஆறு ஏ, Uyandha Aaru Ae - நான் உஜ்ஜீவித்தபடி என்னே!-