திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1430 | பெரிய திருமொழி || 3 | ஒருவனை யுந்திப் பூ மேல் ஓங்குவித் தாகம் தன்னால்
ஒருவனைச் சாபம் நீக்கி உம்பராள் என்று விட்டான்
பெருவரை மதிள்கள் சூழ்ந்த பெரு நகர ரவணை மேல்
கருவரை வண்ணன் தன் பேர் கருதி நான் உய்ந்தவாறே –5-9-3 | பதவுரை Show / Hideஒருவனை உந்தி பூ மேல் ஓங்குவித்து, Oruvanai Undhi Poo Mel Onguvidhu - நான்முகனாகிய ஒருவனை திருநாபிக் கமலத்தில் உண்டாக்கினவனும் (- (நான் உய்ந்த ஆறு ஏ–.)) ஒருவனை, Oruvanai - ருத்ரனாகிய ஒருவனை ஆகம் தன்னால், Aagam Thannal - (தனது) திருமார்பிலுண்டான ஸ்வேதஜலத்தாலே சாபம் நீக்கி, Saapam Neekki - (அவனுடைய பிரமஹத்தி சாபத்தைத் தொலைத்து உம்பர் ஆள், Umbar Aal - (நீ முன் போலவே) மேலுலகங்களை ஆளக்கடவாய் என்று விட்டான், Endru Vittaan - என்று விடை கொடுத்தவனும் பெரு வரை மதில்கள் சூழ்ந்த, Peru Varai Mathilgal Soozhntha - பெரிய மலைகள் போன்ற திருமதிள்களாலே சூழப்பட்ட பெரு நகர், Peru Nagar - திருப்பேர்நகரில் அரவு அணை மேல், Aravu Anai Mel - சேஷ சயனத்தின் மீது கருவரை வண்ணன் தன் பேர், Karuvurai Vannan Than Peer - கரியமலை யொன்று சாய்ந்தாற்போன்றுள்ளனனுமான பெருமானடைய திருநாமங்களை கருதி, Karuthi - சிந்தித்து |