திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1396 | பெரிய திருமொழி || (5-5–வெருவாதாள்) (திருவரங்கம் 2) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஒரு சர்வஞ்ஞன் அஞ்ஞன் செய்வதைச் செய்தால்-இதுக்கு மேல் எனனால் போக்கடி தேடப் போமோ இவள் தன் திறத்து படாது இருக்க தானே வந்து இப்படி பண்ணி-தானே உபேஷிப்பதே முன் தீமை செய்வானும் தானேயாய்-உபேஷிப்பானும் தானே யாவதே) 9 | பந்தோடு கழல் மருவாள் பைங்கிளியும் பாலூட்டாள் பாவை பேணாள்
வந்தானோ திருவரங்கன் வாரானோ என்று என்றே வளையும் சோரும்
சந்தோகன் பவுழியன் ஐந்து அழல் ஓம்பு தைத்ரியன் சாம வேதி
அந்தோ என் மகளைச் செய்தனகள் அம்மனைமீர் அறிகிலேனே –5-5-9 | பதவுரை Show / Hideபந்தோடு கழல் மருவாள், Pandhodu Kazhal Maruvaal - பந்தையும் கழற்காய்களையும் தொடுகிறதுமில்லை; (- (என் மகள்) (என் மகளை செய்தனகள் அம்மனைமீர்! அறிகிலேன், அந்தோ!)) பை கிளியும் பால் ஊட்டாள், Pai Kiliyum Paal Oottal - (தனது) பசுமை தங்கிய கிளிக்குப் பாலூட்டுகிறதுமில்லை; பாவை பேணாள், Paavai Paenaal - (விளையாட்டுக் கருவியான) மரப்பாச்சியை நோக்குவதுமில்லை; திருஅரங்கன், Thiruarangan - “ஸ்ரீரங்கநாதன் வந்தானோ வாரானோ என்று என்றே, Vandaano Varaanoo Endru Endrae - வந்து விட்டானோ? என்றும் வரமாட்டானோ?” என்றும் சொல்லிக்கொண்டு வளையும் சோரும், Valaiyum Soorum - கைவளைகள் கழல நிற்கின்றாள் சந்தோகன், Sandhogan - சாந்தோக்ய உபநிஷத்தினால் ப்ரதிபாத்யனும் பௌழியன், Pauzhiyan - கௌஷீதகீப்ராஹ்மணத்தினால் ப்ரதிபாத்யனும் ஐந்து அழல் ஓம்பு, Ainthu Azhai Oombu - பஞ்சாக்நிகளினால் ஆராதிக்கப் படுபவனும் தைத்திரியன், Thaitthiriyan - தைத்திரிய உபநிஷத்தினால் பிரதிபாதிக்கப் படுபவனும் சாமவேதி, Saamavethi - ஸாமவேதப்ரதிபாத்யனுமான பெருமான் வந்து, Vandhu - இவ்விடம் வந்து |