திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1387 | பெரிய திருமொழி || (5-4–உந்திமேல்) (திருவரங்கம் 1) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (உந்தி – வையம் -இரண்டும் ஸ்ரீ உலகுண்ட ஸ்ரீ வடதள சாயி விஷயம் விளைத்த -வம்பு -ஸ்ரீ ராமன் விஷயம் கலை -கஞ்சன் -ஸ்ரீ கிருஷ்ண விஷயம் சேயன் -அல்லி -ஸ்ரீ யபதி விஷயம்–இப்படி நாலு இரண்டும் பண்டு -ஸ்ரீ திருக் குறளன் விஷயம் ஏனம் -சகல அவதார சமுதாய விஷயம்–இப்படி இரண்டும்-இவற்றை சாபிப்ராயமாக அப்யசிக்க வல்லார்கள் ஸ்ரீ கோயிலிலே இருந்து அனுபவித்து பின்னை சரீர சமனந்தரம் ஸ்ரீ பரம பதம் தாங்கள் இட்ட வழக்காக பெறுவர்கள்) 10 | அல்லி மாதர் அமரும் திரு மார்வன் அரங்கத்தைக்
கல்லின் மன்னு மதிள் மங்கையர் கோன் கலி கன்றி சொல்
நல்லிசை மாலைகள் நாலிரண்டும் இரண்டும் உடன்
வல்லவர் தாம் உலகாண்டு பின் வானுலகு ஆள்வரே –5-4-10 | பதவுரை Show / Hideஅல்லி மாதர் அமரும் திருமார்வன் அரங்கத்தை, Alli Maathar Amarum Thirumaarvan Arangaththai - பூவிற் பிறந்த பெரியபிராட்டியா பொருந்தி வாழப்பெற்ற திருமார்வையுடையனான ஸர்வேச்வரனுடைய திருவரங்கம் விஷயமாக, கல்லின் மன்னு மதிள் மங்கையர் கோன் கலிகன்றி, Kallin Mannu Mathil Mangaiyar Kon Kalikanri - கல்லாலே கட்டப்பட்ட திடமாயிக்கிற மதிளையுடைத்தான திருமங்கை நகரில் உள்ளவர்களுக்கு தலைவரான ஆழ்வார் சொல் நல் இசை மாலைகள், Sol Nal Isai Maalaigal - அருளிச்செய்த நல்ல இசையோடு கூடின சொல் மாலையாகிய நாலிரண்டும் இரண்டும், Naalirandum Irandum - இப்பத்துப்பாட்டுக்களையும் உடன் வல்லவர்தாம், Udan Vallarvartaam - கருத்தோடுகூட ஓதவல்லவர்கள் உலகு ஆண்டு, Ulaku Aandu - இவ்வுலகில் (கோயில் வாழ்ச்சியை) அநுபவித்து பின் வான் உலகு ஆள்வர், Pin Vaan Ulaku Aalvar - பரமபதாநுபவத்தைப் பெறக்கடவர். |