திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1377 | பெரிய திருமொழி || (5-3–வென்றி) (திரு வெள்ளறை) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (அசந்நிஹிதனே யாகிலும் விட ஒண்ணாதது யாய்த்து வடிவழகு – அழகு இல்லை யாகிலும் விட ஒண்ணாதது ஆய்த்து பிராப்தி – பிராப்தி இல்லை யாகிலும் விட ஒண்ணாதது யாய்த்து போக்யதை – இப்பத்தையும் ஒன்றும் விடாதே ஏத்த வல்லவர்களை ஸ்ரீ நித்ய சூரிகள் ஸ்ரீ வைகுண்ட நாதனை விட்டு இவர்களை ஆதரியா நிற்பர்கள்) 10 | மஞ்சுலா மணி மாடங்கள் சூழ் திரு வெள்ளறை அதன் மேய
அஞ்சனம் புரையும் திரு வுருவனை யாதியை யமுதத்தை
நஞ்சுலாவிய வேல் வலவன் கலி கன்றி சொல் ஐ இரண்டும்
எஞ்சலின்றி நின்று ஏத்த வல்லார் இமையோர்க்கு அரசர் ஆவர்களே –5-3-10 | பதவுரை Show / Hideமஞ்சு உலாம் மணி மாடங்கள் சூழ், Manju Ulaam Mani Maadangal Soozh - மேகங்கள் படிந்து உலாவப்பெற்ற நவரத்நங்கள் பதித்த மாளிகைகளினால் சூழப்பட்ட திருவெள்ளறை அதன் மேய, Thiruvellarai Adan Meyya - திருவெள்ளறையில் நித்ய வாஸம் செய்பவனும் அஞ்சனம் புரையும் திரு உருவனை, Anjanam Puraiyum Thiru Uruvanei - மை போன்ற திவ்யமான வடிவையுடையவனும் ஆதியை, Aadhiye - ஸகல ஜகத்காரண பூதனும் அமுதத்தை, Amudhatthai - அமுதம்போல் போக்யனுமான எம்பெருமானை, நஞ்சு உலாவிய வேல் வலவன் கலிகன்றி சொல் ஐ இரண்டும், Nanju Ulaaviya Vel Valavan Kalikanri Sol Aiy Irandum - விஷம்தங்கிய வேற்படையைச் செலுத்தவல்லவரான திருமங்கையாழ்வார் அருளிச்செய்த இப்பத்துப் பாசுரங்களைக் கொண்டு எஞ்சல் இன்றி நின்று ஏத்த வல்லார், Enjal Inri Nindru Aetha Vallar - குறைவின்றி மனம் நிலைபெற்று துதிக்க வல்லவர்கள் இமையோர்க்கு அரசு ஆவர்கள் –, Imaiyorkku Arasu Aavargal - நித்யஸூரிகளுக்கும் ஆதரிக்கத் தக்கவராவலர்கள் |