திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1313 | பெரிய திருமொழி || (4-7–கண்ணார் கடல்) (திருநாங்கூர்த் திருவெள்ளக்குளம்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (அவித்யா கர்மா வாசனா ருசி பகவத் அபசாராதிகள் பிராரப்த கர்மம் இவை துடக்கமான எல்லா இடரும் கெடுமாறு அருளாயே) 6 | கல்லால் கடலை யணை கட்டி யுகந்தாய்
நல்லார் பலர் வேதியர் மன்னிய நாங்கூர்ச்
செல்வா திரு வெள்ளக் குளத்து உறைவானே
எல்லாவிடரும் கெடுமாறு அருளாயே –4-7-6 | பதவுரை Show / Hideகல்லால் கடலை அணை கட்டி உகந்தாய், Kallal Kadalai Anai Katti Uganthaa - கண்ட கற்களையுங்கொண்டு கடலிலே சேதுகட்டி மகிழ்ந்தவனே! நல்லார் பலர் வேதியர் மன்னிய நாங்கூர், Nallaar Palaar Vedhiyar Manniya Naangoor - விலக்ஷணரான பல வைதிகர்கள் நித்யவாஸம் பண்ணுகிற திருநாங்கூரில் திருவெள்ளக் குளத்து உறைவானே, Thiruvellak Kulaththu Uraivaane - திருவெள்ளக்குளத்தில் எழுந்தருளியிருப்பவனே! செல்வா, Selvaa - செல்வனே! எல்லா இடரும் கெடும் ஆறு அருளாய், Ella Idarum Kedu Aaru Arulai - (எனது) துன்பங்களெல்லாம் தீரும்படி அருள்புரிய வேணும். |