திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 1313 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
1313பெரிய திருமொழி || (4-7–கண்ணார் கடல்) (திருநாங்கூர்த் திருவெள்ளக்குளம்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (அவித்யா கர்மா வாசனா ருசி பகவத் அபசாராதிகள் பிராரப்த கர்மம் இவை துடக்கமான எல்லா இடரும் கெடுமாறு அருளாயே) 6
கல்லால் கடலை யணை கட்டி யுகந்தாய் நல்லார் பலர் வேதியர் மன்னிய நாங்கூர்ச் செல்வா திரு வெள்ளக் குளத்து உறைவானே எல்லாவிடரும் கெடுமாறு அருளாயே –4-7-6
பதவுரை Show / Hide
கல்லால் கடலை அணை கட்டி உகந்தாய், Kallal Kadalai Anai Katti Uganthaa - கண்ட கற்களையுங்கொண்டு கடலிலே சேதுகட்டி மகிழ்ந்தவனே!
நல்லார் பலர் வேதியர் மன்னிய நாங்கூர், Nallaar Palaar Vedhiyar Manniya Naangoor - விலக்ஷணரான பல வைதிகர்கள் நித்யவாஸம் பண்ணுகிற திருநாங்கூரில்
திருவெள்ளக் குளத்து உறைவானே, Thiruvellak Kulaththu Uraivaane - திருவெள்ளக்குளத்தில் எழுந்தருளியிருப்பவனே!
செல்வா, Selvaa - செல்வனே!
எல்லா இடரும் கெடும் ஆறு அருளாய், Ella Idarum Kedu Aaru Arulai - (எனது) துன்பங்களெல்லாம் தீரும்படி அருள்புரிய வேணும்.