திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1310 | பெரிய திருமொழி || (4-7–கண்ணார் கடல்) (திருநாங்கூர்த் திருவெள்ளக்குளம்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (மழையில் அகப்பட்ட இடையர் இடருக்கும் என் இடருக்கும் வாசி பார்த்துக் கொள்ளாய் துரியோதனன் தானும் தன்னுடைய பரிகரமுமாக தம் தாம் வசம் அன்றிக்கே வணங்கினார்கள் சேஷி முன்பு சேஷ பூதர் அனுகூலிக்கக் கடவோம் அல்லோம் -என்னும் வ்யவஸ்தை அப்படியே சென்றார் எல்லாரும் வணங்கா நின்ற திரு வெள்ளக் குளத்துள் நின்றாய் ஸ்வரூப ரூபகுணங்களால் எல்லை காண ஒண்ணாதவனே இரண்டு தலையும் ஒக்க ஆற்றாமை உண்டாகில் அன்றோ ஆறி இருப்பது) 3 | குன்றால் குளிர் மாரி தடுத்து உகந்தானே
நன்றாய பெரும் புகழ் வேதியர் நாங்கூர்
சென்றார் வணங்கும் திரு வெள்ளக் குளத்துள்
நின்றாய் நெடியாய் அடியேன் இடர் நீக்கே –4-7-3 | பதவுரை Show / Hideகுளிர்மாரி குன்றால் தடுத்து, Kulirmaari Kunraal Thadhu - (திருவாய்ப்பாடியை) வவ்வலிடப்ப பண்ணின மழையைக் கோவர்த்தன மலையினால் தடைசெய்து (- (திருவெள்ளக்குளத்துள்;)) ஊகந்தானே, Oogandhaane - திருவுள்ளம் மகிழ்ந்தவனே! நன்று ஆய பெரு புகழ் வேதியர், Nandru Aaya Peru Pugazh Vedhiyar - விலக்ஷணமான மிக்க கீர்த்தியையுடைய வைதிகர்கள் வாழ்கிற நாங்கூர், Naangoor - திருநாங்கூரில் சென்றார் வணங்கும், Senraar Vanangum - வருவார் போவாரெல்லாரும் வணங்கப்பெற்ற நின்றாய், Nindraai - நின்றருள்கின்ற நெடியாய், Nedhiyaai - ஸர்வேச்வரனே!, அடியேன் இடர் நீக்கு, Adiyeen Idar Neekku - அடியேனுடைய துன்பங்களைப் போக்கியருள். |