திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 1310 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
1310பெரிய திருமொழி || (4-7–கண்ணார் கடல்) (திருநாங்கூர்த் திருவெள்ளக்குளம்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (மழையில் அகப்பட்ட இடையர் இடருக்கும் என் இடருக்கும் வாசி பார்த்துக் கொள்ளாய் துரியோதனன் தானும் தன்னுடைய பரிகரமுமாக தம் தாம் வசம் அன்றிக்கே வணங்கினார்கள் சேஷி முன்பு சேஷ பூதர் அனுகூலிக்கக் கடவோம் அல்லோம் -என்னும் வ்யவஸ்தை அப்படியே சென்றார் எல்லாரும் வணங்கா நின்ற திரு வெள்ளக் குளத்துள் நின்றாய் ஸ்வரூப ரூபகுணங்களால் எல்லை காண ஒண்ணாதவனே இரண்டு தலையும் ஒக்க ஆற்றாமை உண்டாகில் அன்றோ ஆறி இருப்பது) 3
குன்றால் குளிர் மாரி தடுத்து உகந்தானே நன்றாய பெரும் புகழ் வேதியர் நாங்கூர் சென்றார் வணங்கும் திரு வெள்ளக் குளத்துள் நின்றாய் நெடியாய் அடியேன் இடர் நீக்கே –4-7-3
பதவுரை Show / Hide
குளிர்மாரி குன்றால் தடுத்து, Kulirmaari Kunraal Thadhu - (திருவாய்ப்பாடியை) வவ்வலிடப்ப பண்ணின மழையைக் கோவர்த்தன மலையினால் தடைசெய்து (- (திருவெள்ளக்குளத்துள்;))
ஊகந்தானே, Oogandhaane - திருவுள்ளம் மகிழ்ந்தவனே!
நன்று ஆய பெரு புகழ் வேதியர், Nandru Aaya Peru Pugazh Vedhiyar - விலக்ஷணமான மிக்க கீர்த்தியையுடைய வைதிகர்கள் வாழ்கிற
நாங்கூர், Naangoor - திருநாங்கூரில்
சென்றார் வணங்கும், Senraar Vanangum - வருவார் போவாரெல்லாரும் வணங்கப்பெற்ற
நின்றாய், Nindraai - நின்றருள்கின்ற
நெடியாய், Nedhiyaai - ஸர்வேச்வரனே!,
அடியேன் இடர் நீக்கு, Adiyeen Idar Neekku - அடியேனுடைய துன்பங்களைப் போக்கியருள்.