திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1299 | பெரிய திருமொழி || (4-6–தாவளந்து) (திருநாங்கூர்க் காவளம்பாடி) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (அவ் ஊரில் உள்ளாருக்கு இந்த்ராதிகள் படி இல்லை யாய்த்து அவனை இரப்பாளன் ஆக்கி தாங்கள் வயிறு வளரார்கள் ஆய்த்து மகா ராஜரைப் போலே தங்களை அழிய மாறி நோக்குவர்கள்) 2 | மண் இடந்து ஏனமாகி மாவலி வலி தொலைப்பான்
விண்ணவர் வேண்டச் சென்று வேள்வியில் குறை இரந்தாய்
துண்ணென மாற்றார் தம்மைத் துலைத்தவர் நாங்கை மேய
கண்ணனே காவளந்தண் பாடியாய் களை கண் நீயே –4-6-2 | பதவுரை Show / Hideஎனம் ஆகி மண் இடந்து, Enam Aagi Mann Idandhu - ஆதிவராஹமாகி (அண்டபித்தியில் அழுந்திக்கிடந்த) பூமியைப் பிரித்துக் கொணர்ந்தவனாயும் (- (சாவளந்தண்பாடியாய்! கண்ணனெ!) (நீயே களைகண்.)) மாவலி வலி தொலைப்பான், Maavali Vali Tholaippaan - மஹாபலியினுடைய மிடுக்கைப்போக்குமாறு விண்ணவர் வேண்ட, Vinnavar Venda - தேவர்கள் யாசிக்க (அதற்கிணங்கி) வேள்வியில் சென்று, Velviyil Sendru - (அந்த மாவலியின்) யாக பூமியில் எழுந்தருளி குறை இரந்தாய், Kurai Irandhaai - தனக்கு வேண்டியதை யாசித்துப் பெற்றவனே!, மாற்றார் தம்மை துண்ணென தொலைத்தவர் நாங்கை மேய, Maatraar Thammai Thunnena Tholaiththavar Naangkai Maeya - பகைவர்களைச் சீக்கிரமாக வென்று ஒழித்தவர்கள் வாழ்கிற திருநாங்கூரில் பொருந்தியிருக்கிற |