திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 1284 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
1284பெரிய திருமொழி || (4-4–மாற்றரசர்) (திருநாங்கூர்த் திருத்தெற்றியம்பலம்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஸ்ரீ சர்வேஸ்வரன் செல்லும்படியான யாகம் இறே மங்கலங்கள் சேரத் தட்டு இல்லை இறே மகா பலி உடையனாய் தான் குறைவாளனாய் இரந்த-என்ன பிள்ளை தான்) 7
பொங்கு இலங்கு புரி நூலும் தோலும் தாழப் பொல்லாத குறள் உருவாய் பொருந்தா வாணன் மங்கலம் சேர் மறை வேள்வி யதனுள் புக்கு மண்ணகலம் குறை இரந்த மைந்தன் கண்டீர் கொங்கு அலர்ந்த மலர்க் குழலார் கொங்கை தோய்ந்த குங்குமத்தின் குழம்பு அளைந்த கோலம் தன்னால் செம் கலங்கல் வெண் மணல் மேல் தவழு நாங்கூர்த் திருத் தெற்றி அம்பலத்து என் செங்கண் மாலே –4-4-7
பதவுரை Show / Hide
கொங்கு அலர்ந்த, Kongu Alarntha - பரிமளம் பரவாநின்ற (- (நாங்கூர், திருத்தெற்றியம்பலத்து என் செங்கண் மால்;))
மலர் குழலார், Malar Kuzhalaar - பூக்களையணிந்த கூந்தலையுடையரான மாதர்களின்
கொங்கை தோய்ந்த, Kongai Thoyntha - தனங்களின் மீது படிந்த
குங்குமத்தின் குழம்பு, Kungumaththin Kuzhambu - குங்குமச்சாறு தன்னை
அளைந்த, Alaindha - அளைந்ததனாலுண்டான
கோலம் தன்னால், Kolam Thannal - அழகினால்
செம், Sem - சிவந்திருக்கிற
கலங்கல், Kalangal - வெள்ளமானது
வெண் மணல் மேல் தவழும், Ven Manal Mel Thavazhum - வெளுத்த மணற்குன்றுகளின் மேல் பரவப்பெற்ற
பொங்கு இலங்கு புரிநூலும் தோலும் தாழ, Pongu Ilangu Purinoolum Tholum Thaazha - மிக விளங்குகின்ற யஜ்ஞோப வீதமும் கிருஷ்ணாஜிநமும் தொங்கப்பெற்ற
பொல்லாத குறள் உரு ஆய், Polladha Kurall Uru Aay - அழகிய வாமநமூர்த்தியாகி
பொருந்தா வாணன், Porundha Vaanan - ஆஸுரப்ரக்ருதியான மஹாபலியினுடைய
மங்கலம் சேர் மறை வேள்வி அதனுள் புக்கு, Mangalam Ser Marai Velvi Adhanul Pukku - மங்களம் பொருந்திய வேத கோஷத்தையுடைய யாக பூமியிலே எழுந்தருளி
குறைமண்அகலம் இரந்த மைந்தன் கண்டீர், Kuraimanagalam Irandha Maindan Kandeer - தனக்கு வேண்டியதான பூமியையாசித்த சிறுககன் காண்மின்
கேளா, Kela - கேட்டு என்றபடி