திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 1276 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
1276பெரிய திருமொழி || (4-3–பேரணிந்து) (திருநாங்கூர்ச் செம்பொன் செய்கோயில்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (பாலும் சக்கரையும் அனுபவித்து தமக்கு இனித்தாகையாலே எல்லாருக்கும் ரசித்தவன் என்று கொண்டு அருளிச் செய்கிறார்) 9
களம் கனி வண்ணா கண்ணனே என்தன் கார் முகிலே என நினைந்திட்டு உளம் கனிந்து இருக்கும் அடியவர் தங்கள் உள்ளத்து ஊறிய தேனைத் தெளிந்த நான்மறையோர் நாங்கை நன்னடுவுள் செம் பொன் செய் கோயிலின் உள்ளே வளம் கொள் பேரின்பம் மன்னி நின்றானை வணங்கி நான் வாழ்ந்து ஒழிந்தேனே –4-3-9
பதவுரை Show / Hide
களங்கனி வண்ணா, Kalankani Vanna - களாப்பழம்போன்ற திருநிறமுடையவனே! (- (தெளிந்த நான் மறையோர் நாங்கை நன்னடுவுள்) (செம்பொன்செய் கோயிலின் உள்ளே;) (நான் வணங்கி வாழ்ந்தொழிந்தேன்))
கண்ணனே, Kannane - ஸ்ரீக்ருஷ்ணனே!
என்தன் கார்முகிலே, Enthan Kaarmugile - என்னுடைய காளமேகமே!
என நினைந்திட்டு, En Ninaindittu - என்று தியானித்து
உளம் கனிந்திருக்கும், Ulam Kanindirukkum - நெஞ்சு பரிபக்குவமாயிருக்கிற
அடியவர், Adiyavar - தங்கள்  அடியார்களுடைய
உள்ளத்துள் ஊறிய தேனை, Ullaththul Ooriy Thenai - ஹ்ருதயத்திலே மாற்றுமாறாதே யிருக்கிற தேன் போன்றவனும்,
வளம் கொள்பேர் இன்பம் மன்னி நின்றானை, Valam Kolpaer Inbam Manni Nindraanai - மிகுந்த பரமாநந்தம் பொருந்தி நிற்பவனுமான பெருமானை