திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1263 | பெரிய திருமொழி || (4-2–கம்பாமா) (திருவண் புருடோத்தம்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (மூவடியை நீர் ஏற்று திருக்கையிலே நீர் விழுந்த அநந்தரம் வளர்ந்து அருளுகிற போது ப்ரஹ்ம பதத்து அளவும் சென்று அவன் கையிலே திருவடிகள் இருக்க அவன் புஷ்பாதி உபகரணங்களைக் கொண்டு ஆஸ்ரயிக்கும்படி யாகவும் கங்கை புறப் படும் படியாகவும் திருவடிகளை நிமிர்த்து அருளின ஸ்ரீ சர்வேஸ்வரன் வந்து நித்ய வாசம் பண்ணுகிற தேசம்) 6 | அங்கையால் அடி மூன்று நீர் ஏற்று அயன் அலர் கொடு தொழுது ஏத்த
கங்கை போதரக் கால் நிமிர்த்து அருளிய கண்ணன் வந்து உறை கோயில்
கொங்கை கொங்கு அவை காட்ட வாய் குமுதங்கள் காட்ட மா பதுமங்கள்
மங்கைமார் முகம் காட்டிடு நாங்கூர் வண் புருடோத்தமமே –4-2-6 | பதவுரை Show / Hideமூன்று அடி, Moondru Adi - மூவடி நிலத்துக்காக (- (திரிவிக்கிரமனாக ஓங்கிவளர்ந்த காலத்து) (வந்து உறை கோயில்) (வண்புருடோத்தமம்)) அம் கையால் நீர் ஏற்று, Am Kaiyhaal Neer Aetru - அழகிய திருக்கையினால் உதக தானம் வாங்கி அயன் அலர் கொடு தொழுகு ஏத்த, Ayan Alar Kodu Thozhugu Aettha - பிரமனானவன் புஷ்பங்களை ஸமர்ப்பித்து வணங்கி துதிக்கும்படியாகவும் கங்கை போதா கால் நிமிர்த்தருளிய கண்ணன், Gangai Podha Kaal Nimirththaruliy Kannan - கங்காநதியானது பெருகும் படியாகவும் திருவடியை உயரநிட்டின ஸர்வேச்வரன் கோங்கு அவை, Kongu Avai - கோங்குமரத்தின் அரும்புகளானவை மங்கைமார் கொங்கை காட்ட, Mangaimaar Kongai Kaata - (அவ்வூரிலுள்ள) பெண்களினுடைய தனங்களை பிரகாசிப்பிக்கவும் குமுதங்கள், Kumudhangal - செவ்வாம்பல்களானவை வாய் காட்ட, Vaai Kaata - (அப்பெண்களின்) அதரங்களைப் பிரகாசிப்பிக்கவும் மா பதுமங்கள், Maa Pathumangal - சிறந்த தாமரை மலர்கள் முகம் காட்டிடு, Mugam Kaattidu - (அப்பெண்களின்) முகங்களை பிரகாசிப்பிக்கவும் பெற்ற நாங்கூர், Naangoor - திருநாங்கூரில் |