திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 1259 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
1259பெரிய திருமொழி || (4-2–கம்பாமா) (திருவண் புருடோத்தம்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (பூத்த கடம்பின் மேலே ஏறி காளியன் உடைய பணங்கள் ஆகிற ரெங்கத்தின் மேலே அவன் தப்பாதபடியாக நினைவு இன்றிக்கே இருக்கச் செய்தே வந்து கடுகப் பாய்ந்து அந்த நிருத்தத்திலே-வன்மைக் கூத்து என்றும்-மென்மைக் கூத்து என்றும் சில உண்டு -அவற்றை அடையப் பண்ணின அயர்வறும் அமரர்கள் அதிபதி யானவன் வந்து வர்த்திக்கிற கோயில்) 2
பல்லவம் திகழ் பூங்கடம்பு ஏறி அக்காளியன் பணம் அரங்கில் ஒல்லை வந்து உறப் பாய்ந்து அரு நடம் செய்த உம்பர்கோன் உறை கோயில் நல்ல வெந்தழல் மூன்று நால் வேதம் ஐ வேள்வியோடு ஆறங்கம் வல்ல வந்தணர் மல்கிய நாங்கூர் வண் புருடோத்தமமே——— –4-2-2
பதவுரை Show / Hide
பல்லவம் திகழ் பூ கடம்பு ஏறி, Pallavam Thigazh Poo Kadambu Aeri - தளிர்கள் விளங்காநின்ற பூத்த கடம்ப மரத்தின்மேல் ஏறி (- (வண் புருடோத்தமம்))
அ காளியன் பணம் அரங்கில், A Kaaliyan Panam Arangil - அப்படிப்பட்ட (கொடியனான) காளியமுடைய படங்களாகிற நாட்ய  ஸ்தலத்தில்
ஒல்லை வந்து உறபாய்ந்து, Ollai Vandhu Urupaayndhu - திடீரென்று வந்து சிக்கனக் குதித்து
அரு நடம் செய்த, Aru Nadam Seidha - அருமையான கூத்தாட்டம் செய்த
உம்பர் கோன், Umbar Koon - தேவாதி தேவன்
உறைகோயில், Uraikoyil - வாழுமிடம்;
வெம் தழல் மூன்று, Vem Thazhal Moondru - த்ரேதாக்நிகளையும்
நால் வேதம், Naal Vedham - நான்கு வேதங்களையும்
ஐ வேள்வியோடு, Ai Velviyodu - பஞ்ச மஹாயஜ்ஞங்களையும்
ஆறு அங்கம், Aaru Angam - வேதாங்கங்கள் ஆறையும்
வல்ல, Valla - அதிகரித்து ஸமர்த்தர்களான
நல்ல அந்தணர், Nalla Andhanar - நல்ல பிராமணர்கள்
மல்கிய, Malkiya - நிறைந்திருக்கப்பெற்ற
நாங்கூர், Naangoor - திருநாங்கூரில்