திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1259 | பெரிய திருமொழி || (4-2–கம்பாமா) (திருவண் புருடோத்தம்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (பூத்த கடம்பின் மேலே ஏறி காளியன் உடைய பணங்கள் ஆகிற ரெங்கத்தின் மேலே அவன் தப்பாதபடியாக நினைவு இன்றிக்கே இருக்கச் செய்தே வந்து கடுகப் பாய்ந்து அந்த நிருத்தத்திலே-வன்மைக் கூத்து என்றும்-மென்மைக் கூத்து என்றும் சில உண்டு -அவற்றை அடையப் பண்ணின அயர்வறும் அமரர்கள் அதிபதி யானவன் வந்து வர்த்திக்கிற கோயில்) 2 | பல்லவம் திகழ் பூங்கடம்பு ஏறி அக்காளியன் பணம் அரங்கில்
ஒல்லை வந்து உறப் பாய்ந்து அரு நடம் செய்த உம்பர்கோன் உறை கோயில்
நல்ல வெந்தழல் மூன்று நால் வேதம் ஐ வேள்வியோடு ஆறங்கம்
வல்ல வந்தணர் மல்கிய நாங்கூர் வண் புருடோத்தமமே——— –4-2-2 | பதவுரை Show / Hideபல்லவம் திகழ் பூ கடம்பு ஏறி, Pallavam Thigazh Poo Kadambu Aeri - தளிர்கள் விளங்காநின்ற பூத்த கடம்ப மரத்தின்மேல் ஏறி (- (வண் புருடோத்தமம்)) அ காளியன் பணம் அரங்கில், A Kaaliyan Panam Arangil - அப்படிப்பட்ட (கொடியனான) காளியமுடைய படங்களாகிற நாட்ய ஸ்தலத்தில் ஒல்லை வந்து உறபாய்ந்து, Ollai Vandhu Urupaayndhu - திடீரென்று வந்து சிக்கனக் குதித்து அரு நடம் செய்த, Aru Nadam Seidha - அருமையான கூத்தாட்டம் செய்த உம்பர் கோன், Umbar Koon - தேவாதி தேவன் உறைகோயில், Uraikoyil - வாழுமிடம்; வெம் தழல் மூன்று, Vem Thazhal Moondru - த்ரேதாக்நிகளையும் நால் வேதம், Naal Vedham - நான்கு வேதங்களையும் ஐ வேள்வியோடு, Ai Velviyodu - பஞ்ச மஹாயஜ்ஞங்களையும் ஆறு அங்கம், Aaru Angam - வேதாங்கங்கள் ஆறையும் வல்ல, Valla - அதிகரித்து ஸமர்த்தர்களான நல்ல அந்தணர், Nalla Andhanar - நல்ல பிராமணர்கள் மல்கிய, Malkiya - நிறைந்திருக்கப்பெற்ற நாங்கூர், Naangoor - திருநாங்கூரில் |