திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1250 | பெரிய திருமொழி || (4-1–போதலர்ந்த) (திருத்தேவனார் தொகை) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஸ்வ வ்யதிரிக்த சமஸ்த வஸ்துகளுக்கும் தனக்கு பிரகாரமாய் புறம்பு ஒருவர் இன்றிக்கே உபய விபூதியும் தன் நிழலிலே ஒதுங்கும்படி இருக்கையாலே தலைவனானவன் வந்து நித்ய வாசம் பண்ணுகிற தேசம்) 3 | வானாடும் மண்ணாடும் மற்றுள்ள பல்லுயிரும்
தானாய வெம்பெருமான் தலைவன் அமர்ந்து உறையும் இடம்
ஆனாத பெரும் செல்வத்து அருமறையோர் நாங்கை தன்னுள்
தேனாரும் மலர்ப் பொழில் சூழ் திருத் தேவனார் தொகையே –4-1-3 | பதவுரை Show / Hideவான் நாடும் மண் நாடும் மற்று உள்ள பல் உயிரும், Vaan Naadum Mann Naadum Matru Ulla Pal Uyirum - நித்ய விபூதியும் லீலாவிபூதியும் அவ்வவ்விடங்களிலுள்ள பல வகைப்பட்ட ஜீவராசிகளும் (- (எம்பெருமான் தலைவன் அமர்ந்து உறையும் இடம் -;) (நாங்கை தன்னுள் – ;) (திருத்தேவனார் தொகையே.)) தான் ஆய, Thaan Aaya - ஆகிய அவையெல்லாம் தானேயாயிருக்கப்பெற்ற ஆனத, Aanadha - அழிவில்லாத பெரு செல்வத்து, Peru Selvaththu - மிக்க ஐச்வரியத்தையுடையராய் அருமறையோர், Arumaraivor - அருமையான வேதங்களை ஓதினவர்களுமான அந்தணர் வாழ்கிற தேன் ஆரும் மலர் பொழில் சூழ், Then Aarum Malar Pozhil Soozh - தேன் நிறைந்த பூக்களையுடைய சோலைகள் சூழ்ந்த |