திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1203 | பெரிய திருமொழி || (3-6–தூவிரிய) (திருவாலி 2) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஸ்ரமஹரமான வடிவைக் காட்டி பஞ்ச லஷம் குடியில் பெண்களை வளை கவர்ந்தவன் என் கையில் வளை பெறா விடில் உண்டது உருக் காட்டானாய் இரா நின்றான் –சமகாலத்தில் பிறவாதார் வளையும் கொள்ள வேணுமோ இவனுக்கு ஓர் ஊராக வளை கொண்டதுவும்-உண்டது உருக் காட்டுகிறது இல்லை காணும் இவள் கையில் வளை சேஷிக்கில்) 6 | தாராய தண் துளவ வண்டுழுத வரை மார்பன்
போரானைக் கொம்பு ஒசித்த புட் பாகன் என்னம்மான்
தேராரும் நெடு வீதித் திருவாலி நகராளும்
காராயன் என்னுடைய கனவளையும் கவர்வானோ –3-6-6 | பதவுரை Show / Hideதார் ஆய தண் துள்பம் வண்டு உழுத வரை மார்பன், Thaar Aaya Than Thulbam Vandu Uzutha Varai Marban - மாலையாகிய திருத்துழாயிலுள்ள வண்டுகளாலே (தேனும் கண்ணமுங்கொண்டு) சேறு செய்யப்பட்ட மலைபோன்ற திருமார்பையுடையவனும் போர்ஆனை கொம்பு ஒசித்த, Poraanai Kombu Osiththa - போர்புரிய நின்ற (கம்ஸனது) யானையினுடைய தந்தங்களை முறித்தொழித்தவனும் புள் பாகன், Pul Paagan - கருடனை வாஹநமாகக் முறித்தொழித்தவனும் என் அம்மான், En Ammaaan - எனக்கு ஸ்வாமியானவனும் தேர் ஆரும் நெடுவீதி, Ther Aarum Neduveethi - திருத்தேர் எழுந்தருள்வதற்குப் பாங்கான பெருமை பொருந்திய வீதிகளையுடைய திரு ஆலி நகரி ஆளும், Thiru Aali Nagari Aalum - திருவாலி நகரை ஆள்பவனுமான கார் ஆயன், Kaar Aayan - கரியகோலக் கண்ணபிரான் என்னுடைய, Ennudaiya - (வேறு புகலற்றிருக்கிற) என்னுடைய கனம் வளையும், Kaanam Valaiyum - பொன் வளைகளையும் கவர்வானை, Kavaruvaanai - அபஹரிப்பனோ! (அபஹரிப்பது தகுமோ). |