திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1201 | பெரிய திருமொழி || (3-6–தூவிரிய) (திருவாலி 2) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஸ்ரீ திரு ஆய்ப்பாடியிலே சம்பத்தோடே-ஸ்ரீ திரு ஆலியில் சம்பத்தையும் அடைப்பாக்கினால் பின்னை அவனுக்கு நொந்தாரை ஐயோ என்ன அவசரம் உண்டோ-அறியாமை வாராது ஒழிந்தான் இத்தனை நீ போய் அவன் அறியும் படி போய் சொல்லு) 4 | தானாக நினையானேல் தன் நினைந்து நைவேற்கு ஓர்
மீனாய கொடி நெடு வேள் வலி செய்ய மெலிவேனோ
தேன் வாய வரி வண்டே திருவாலி நகராளும்
ஆனாயற்கு என்னுறு நோய் அறியச் சென்று உரையாயே –3-6-4 | பதவுரை Show / Hideதான் ஆக நினையான் ஏல், Thaan Aaga Ninaithaan Ael - அவன் தானாகவே என்னே நினையாதிருந்தாலும்; தன் நினைந்து நைவேற்கு, Than Ninaindhu Naiveerkku - அவன் தன்னையே நினைத்துக் கொண்டு மனம் தளர்ந்திருக்கிற என்னை ஓர்மீன் ஆய கொடி நெடுவேள் வலி செய்ய, Oormeen Aaya Kodi Neduveel Vali Seyya - மகரத்வஜனான மன்மதன் துன்பப்படுத்த மெலிவேனா, Meliveena - இப்படியும் நான் இளைத்துப் போவேனா? தேன் வாய வரி வண்டே, Then Vaai Vari Vande - தேன்போல் இனிய வாய்ப் பேச்சையும் ரேகையையுமுடைய வண்டே!, திரு ஆலி நகரி ஆளும், Thiru Aali Nagari Aalum - திருவாலி நகரியை ஆட்சி புரிகின்ற ஆன் ஆயற்கு சென்று, Aan Aayarku Sendru - கோபாலகிருஷ்ணன் பக்கலிலே போய் எனது உறு நோய், Enathu Uru Noi - எனது அதிகமான மனோவியாதியை அறிய உரையாய், Ariya Uraiyaai - தெளிவாகத் தெரிவிக்க வேணும். |