திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1170 | பெரிய திருமொழி || (3-3–வாட மருதிடை) (தில்லைத் திருச்சித்ரகூடம் 2) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (இவன் வெண்ணெய் உண்டான் என்று இடைப் பெண்கள் கூடி ஏச எட்டுத் திக்கில் உள்ளாறும் திருவடிகளிலே வணங்கும்படியாக நிர்விகாரமான மருதின் உள்ளிட்டுப் போய் இடையர்களும் தேவர்களுமாய் ஆயிரம் திரு நாமங்களை சொல்லிக் கொண்டு தன்னுடைய ஆண் பிள்ளைத் தனத்தை பண்டு பாட வருவான்) 3 | பண்டு இவன் வெண்ணெய் யுண்டான் என்று ஆய்ச்சியர் கூடி இழிப்ப
எண் திசையோரும் வணங்க இணை மருதூடு நடந்திட்டு
அண்டரும் வானத்தவரும் ஆயிர நாமங்களோடு
திண் திறல் பாட வருவான் சித்திர கூடத்து உள்ளானே –3-3-3 | பதவுரை Show / Hideபண்டு, Pandhu - முன்பொருகாலத்தில் (- (சித்திரகூடத்து உள்ளான்-.)) இவள் வெண்ணெய் உண்டான் என்று ஆய்ச்சியர்கூடி இழிப்ப, Ival Vennai Undaan Endru Aaychiyar Koodi Izhippa - “இச்சிறுபிள்ளை வெண்ணெயைத் (திருடித்) தின்றான்” என்று சொல்லி இடைச்சிகள் கும்பல் சேர்ந்து இழிவாகப் பேசப் பெற்றவனர்யும், எண் திசையோரும் வணங்க, En Thisaiyorum Vananga - எட்டுத்திக்கிலுள்ளாரும் வணங்கும்படியாக இணை மருதூடு நடந்திட்டு, Inai Marudhoodu Nadandittu - இரட்டை மருதமரத்தினிடையே நடை பயின்றவனாயும் அண்டரும் வானத்தவரும் ஆயிரம் நாமங்களோடு, Andarum Vaanaththavarum Aayiram Naamangalodu - இடையர்களும் தேவர்களும் ஸஹஸ்ரநாமங்களைச் சொல்லி திண் திறல் பாட வருவான், Thin Thiral Paada Varuvaan - த்ருடமான ஆண் பிள்ளைத் தனத் தைப் பாடும்படி (திருவாய்ப்பாடியில்) ஸஞ்சரித்தவனாயுமுள்ள பெருமான் |