திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1137 | பெரிய திருமொழி || (2-9–சொல்லுவன்) (பரமேஸ்வர விண்ணகரம்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (பகவத் குணங்கள் நெருங்கத் தொடுத்த செவ்விய தமிழ்த் தொடை வல்லார் பெரிய பிராட்டியார் உடைய கடாஷத்தாலே லோகத்திலே மகா ரதராய் கடல் சூழ்ந்த பூமியை அடைய ஆண்டு – உஜ்ஜ்வலர் ஆவார்கள்-இந்த ஐஸ்வர்யம் அடைய மலடாய் போகாமே இவரைப் போலே பாகவத சேஷமாக்கப் பெறுவார் என்கிறார் பத்தாம் பாசுரத்தில் ஆக இத்திரு மொழியால் சர்வேஸ்வரன் விரும்பும் நிலம் ஆகையாலே இத்தேசம் ஆஸ்ரயணீயம் என்றும் அது தான் சர்வ சமாஸ்ரயணீயம் என்றும் சொல்லிற்று ஆயிற்று – அதாகிறது சமதமாத்யுபேதர்க்கு இறே ஆஸ்ரயணீ யத்தில் அதிகாரம் உள்ளது – அவை இல்லாதவனும் தம் தானாய் ஆஸ்ரயிக்கும் படியான தேசம் இறே) 10 | பார்மன்னு தொல்புகழ்ப் பல்லவர்கோன் பணிந் தபர மேச்சுர விண்ணகர்மேல்,
கார்மன்னு நீள்வயல் மங்கையர் தந்தலை வன்கலி கன்றிகுன் றாதுரைத்த,
சீர்மன்னு செந்தமிழ் மாலைவல்லார்த் திரு மாமகள் தன்னரு ளால்,உலகில்
தேர்மன்ன ராயொலி மாகடல்சூழ் செழு நீருல காண்டு திகழ்வர்களே. –2-9-10 | பதவுரை Show / Hideபார்மன்னு தொல் புகழ், Paarmannu Thol Pugazh - இப்பூமியிலே நிலைத்து நின்ற பெரும்புகழையுடைய பல்லவர்கோன், Pallavarkon - பல்லவராஜன் பணிந்த, Panintha - கைங்கரியங்கள் செய்யப்பெற்ற பரமேச்சுரவிண்ணகரிமேல், Paramechuravinnagarimeel - பரமேச்சுரவிண்ணகர மென்னும் திருப்பதி விஷயமாக கார்மன்னு நீள்வயல், Kaarmannu Neelvayal - சினைகொண்ட பெரிய கழனிகளையுடைய மங்கையர்தம்தலைவன், Mangaiyarthamthalaivan - திருமங்கை நாட்டிலுள்ளார்க்குத் தலைவரான கலிகன்றி, Kalikanri - கலியன் குன்றாது, Kunraathu - இலக்கணக் குறையொன்றுமின்றி உரைத்த, Uraitha - அருளிச்செய்த சீர்மன்னு செம் தமிழ் மாலை, Seermannu Sem Tamil Maalai - அழகு பொருந்திய செந்தமிழினாகிய இப்பாமாலைகள் வல்லார், Vallaar - ஓதவல்லவர்கள் திரு மா மகள் தன் அருளால், Thiru Maa Magal Than Arulaal - பெரிய பிராட்டியாருடைய கிருபையினால் உலகில், Ulagil - இவ்வுலகத்திலே தேர்மன்னர் ஆய், Thermannar Aay - தேரை நடத்தவல்ல அரசர்களாகி ஒலி மா கடல் சூழ், Oli Maa Kadal Soozh - ஆரவாரிக்கின்ற பெரிய கடலாலே சூழப்பட்ட செழு நீர்உலகு, Sezhu Neerulagu - செழிப்பான நீர்மையையுடைய உலகையெல்லாம் ஆண்டு, Aandu - ஆண்டுகொண்டு திகழ்வர்கள், Thigalvargal - விளங்குவார்கள். |