திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1136 | பெரிய திருமொழி || (2-9–சொல்லுவன்) (பரமேஸ்வர விண்ணகரம்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (நப்பின்னைப் பிராட்டிக்காக முன்பு ஒருநாள் யுத்தத்திலே உருமு போலேயாய் உருமும் இடி . நெஞ்சிலே க்ரித்ரிமத்தை உடைத்தான –பெரிய ருஷபங்களை அடர்த்தவனுக்கு இடம் பரமேச்சுர விண்ணகரம் கடிய வாயை உடைய-கன்றப் பறை கறக்க -என்று திருவரையிலே கோத்துக் கட்டின பறையோபாதியாக தோற்றுகிறதாயிற்று இவர்க்கு-என்கிறார் ஒன்பதாம் பாசுரத்தில்) 9 | பிறையுடை வாணுதல் பின்னை திறத்து முன்னொரு கால்செரு வில்லுருமின்,
மறையுடை மால்விடை யேழடர்த்தாற் கிடந் தான்தடஞ் சூழ்ந்தழ காயகச்சி,
கறையுடை வாள்மற மன்னர்க்கெடக் கடல் போல முழங்கும் குரல்கடுவாய்,
பறையுடைப் பல்லவர் கோன்பணிந்த பரமேச்சுர விண்ணக ரமதுவே. –2-9-9 | பதவுரை Show / Hideமுன்னே ஒருகால், Munnai Orukaal - முன்னொருகால் (- (தடம் சூழ்ந்து அழகாய கச்சி) (பல்லவர் கோன்–;) (பணிந்த–;) (பரமேச்சுர விண்ணகரம் அதுவே–.)) பிறைவாள் உடை நுதல் பின்னைதிறத்து, Piravaal Udai Nuthal Pinnai Thiraththu - சந்திர கலைபோன்று ஒளியையுடைத்தான நெற்றியையுடையளான நப்பின்னைக்காக உருமின், Urumin - இடிபோன்ற கரிஜனையையுடையவைகளாய் மறை உடை, Marai Udai - எதிர்த்து வருகையை யுடையவைகளான மால் விடை ஏழ், Maal Vidai Ezh - பெரிய ஏழு ரிஷபங்களை செருவில், Seruvil - போர்க்களத்தில் அடர்த்தாற்கு, Adarthaarku - வலியடக்கின பெருமானுக்கு இடம், Idam - இருப்பிடமாவது கறை உடை வாள், Karai Udai Vaal - ரத்தக்கறை மாறாத வாளை யுடையவர்களும் மறம், Maram - த்வேஷமுடையவர்களுமான மன்னர், Mannar - எதிரரசர்க்ள கெட, Keda - முடிந்துபோம்படியக கடல்போல் முழங்கும் குரல், Kadalpol Muzhangum Kural - கடல்போலே கோஷம் செய்கிற குரலையுடைய கடுவாய்ப் பறை உடை, Kadavaip Parai Udai - கடுவாய்ப்பறையை உடையவனான |