திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1125 | பெரிய திருமொழி || (2-8–திரிபுரம்) (திருவட்டபுயகரம்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (வ்யதிரேகத்தில் ஜீவிக்க அரிதாம்படி இரா நின்றார் இவர் ஆர் தான் என்ன- சொன்னபடி பொல்லாது-ஞாநீத் ஆத்ம மே மதம் -கேட்டு அறியாயோ என்றார் – உன்னை ஒழிய ஜீவியாதவன் காண் நான் என்கிறார் –எட்டாம் பாசுரத்தில்) 8 | மேவியெப் பாலும்விண் ணோர்வணங்க வேத முரைப்பர்முந் நீர்மடந்தை
தேவி,அப் பாலதிர் சங்கமிப்பால் சக்கரம் மற்றிவர் வண்ணமெண்ணில்,
காவியொப் பார்க்கட லேயுமொப்பார் கண்ணும் வடிவும் நெடியராய்,என்
ஆவியொப் பாரிவ ரார்க்கொலென்ன அட்ட புயகரத் தேனென்றாரே. –2-8-8 | பதவுரை Show / Hideவிண்னோர், Vinnor - நித்யஸுரிகள் (- (ஆர்கொல் என்ன—;) (அட்டபுயகரத்தேன் என்றார்–.)) எப்பாலும் மேவி, Eppaalum Mevi - சுற்றிலும் சூழ்ந்துகொண்டு வணங்க, Vananga - வணங்கப்பெற்று வேதம் உரைப்பர், Vedham Uraippar - (இப்பெரியவர்) வேதங்களை உருச்சொல்லுகின்றார்; முந்நீர் மடந்தை, Munnir Madanthai - கடலிற்பிறந்த கமலையானவள்; தேவி, Devi - பட்டமஹிஷியாயிரா நின்றாள் அதிர் சங்கம், Adhir Sangam - முழங்குகின்ற சங்கானது அப்பால், Appaal - இடத்திருக்கையிலுள்ளது; சக்கரம், Sakkaram - திருவாழியானது இப்பால், Ippaal - வலத்திருக்கையிலுள்ளது; மற்று, Mattru - இதற்குமேல் இவர் வண்ணம் எண்ணில், Ivar Vannam Ennil - இவருடைய நிறத்தை ஆராய்ந்து சொல்லப்புகுந்தால் காவி ஒப்பார், Kaavi Oppaar - கருநெய்தல் பூவின் நிறத்தை ஒத்திருக்கின்றார்; கடலும் ஒப்பார், Kadalum Oppaar - ஸமுத்ரத்தையும் ஒத்திருக்கின்றார்; கண்ணும் வடிவும் நெடியர்ஆய், Kannum Vadivum Nediyaraai - திருக்கண்களிலும் வடிவழகிலும் அளவிறந்தவராய் என் ஆவி ஒப்பார் இவர், En Aavi Oppaar Ivar - என் உயிரை ஒத்திருக்கின்ற இவர் |