திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 1123 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
1123பெரிய திருமொழி || (2-8–திரிபுரம்) (திருவட்டபுயகரம்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (பெரிய கிளர்த்தியை உடைத்தாய் இருக்கிற கருங்கடல் பூவை காயா செவ்வியிலே அலர்ந்த நீலம் இவற்றோடு ஒக்க தொடுத்த மேகம்-ஓன்று உபமானமாகப் போராமையாலே-அங்கும் இங்குமாக-கதிர் பொறுக்குகிறார் சொன்ன உபமானம் தான் உபமேயதுக்கு போராமையாலே-உனக்கு அறியாமைக்கு உடலாக சொல்லா நின்றாய் நீ அறிகைக்காக வந்து நிற்கிறவன் அன்றோ நான் என்கிறார்-ஆறாம் பாசுரத்தில்) 6
எங்ஙனும் நாமிவர் வண்ணமெண்ணில் ஏது மறிகிலம், ஏந்திழையார் சங்கும் மனமும் நிறைவுமெல்லாம் தம்மன வாகப் புகுந்து,தாமும் பொங்கு கருங்கடல் பூவைகாயாப் போதவிழ் நீலம் புனைந்தமேகம், அங்ஙனம் போன்றிவ ரார்க்கொலென்ன அட்ட புயகரத் தேனென்றாரே. –2-8-6
பதவுரை Show / Hide
நாம், Nam - நாம்; (- (ஆர்கொல் என்ன—;) (அட்டபுகரத்தேன் என்றார்–.))
இவர் வண்ணம், Ivar Vannam - இவருடைய படிகளை
எங்ஙன் எண்ணிலும், Ennan Ennilum - எவ்விதமாக அறியப் பார்த்தாலும்
ஏதும் அறிகிலம், Edum Arikilam - ஒன்றும் அறிய மாட்டுகின்றிலோம்:
ஏந்து இழையார், Endu Ilaiyar - ஆபரணம் பூண்டிருப்பவர்களான மாதர்களுடைய
சங்கும், Sangum - வளைகளும்
மனமும், Manamum - நெஞ்சும்
நிறைவும் எல்லாம், Niraivum Ellam - அடக்கமுமாகிய எல்லாமும்
தம்மன ஆக, Thammana Aka - தம்முடையதாம்படி
புகுந்து, Pukunthu - இவ்விடம் வந்து சேர்ந்து,
பொங்கு கருகடல், Ponku Karukatal - அலையெறிகின்ற கூரிய ஸமுத்ரமென்ன
பூவை, Puvai - பூவைப்பூவென்ன
காயா, Kaya - காயாம்பூவென்ன
போது அவிழ் நீலம், Pothu Avaizhi Nilam - காலத்திலே அலர்ந்த கருநெய்தற்பூவென்ன
புனைந்த மேகம், Punaindha Megam - அழகிய மேகமென்ன
அங்ஙனம் போன்ற இவர் தாம், Annanam Ponda Ivar Tham - இவற்றைப் போலேயிருக்கிற இவர்