திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1123 | பெரிய திருமொழி || (2-8–திரிபுரம்) (திருவட்டபுயகரம்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (பெரிய கிளர்த்தியை உடைத்தாய் இருக்கிற கருங்கடல் பூவை காயா செவ்வியிலே அலர்ந்த நீலம் இவற்றோடு ஒக்க தொடுத்த மேகம்-ஓன்று உபமானமாகப் போராமையாலே-அங்கும் இங்குமாக-கதிர் பொறுக்குகிறார் சொன்ன உபமானம் தான் உபமேயதுக்கு போராமையாலே-உனக்கு அறியாமைக்கு உடலாக சொல்லா நின்றாய் நீ அறிகைக்காக வந்து நிற்கிறவன் அன்றோ நான் என்கிறார்-ஆறாம் பாசுரத்தில்) 6 | எங்ஙனும் நாமிவர் வண்ணமெண்ணில் ஏது மறிகிலம், ஏந்திழையார்
சங்கும் மனமும் நிறைவுமெல்லாம் தம்மன வாகப் புகுந்து,தாமும்
பொங்கு கருங்கடல் பூவைகாயாப் போதவிழ் நீலம் புனைந்தமேகம்,
அங்ஙனம் போன்றிவ ரார்க்கொலென்ன அட்ட புயகரத் தேனென்றாரே. –2-8-6 | பதவுரை Show / Hideநாம், Nam - நாம்; (- (ஆர்கொல் என்ன—;) (அட்டபுகரத்தேன் என்றார்–.)) இவர் வண்ணம், Ivar Vannam - இவருடைய படிகளை எங்ஙன் எண்ணிலும், Ennan Ennilum - எவ்விதமாக அறியப் பார்த்தாலும் ஏதும் அறிகிலம், Edum Arikilam - ஒன்றும் அறிய மாட்டுகின்றிலோம்: ஏந்து இழையார், Endu Ilaiyar - ஆபரணம் பூண்டிருப்பவர்களான மாதர்களுடைய சங்கும், Sangum - வளைகளும் மனமும், Manamum - நெஞ்சும் நிறைவும் எல்லாம், Niraivum Ellam - அடக்கமுமாகிய எல்லாமும் தம்மன ஆக, Thammana Aka - தம்முடையதாம்படி புகுந்து, Pukunthu - இவ்விடம் வந்து சேர்ந்து, பொங்கு கருகடல், Ponku Karukatal - அலையெறிகின்ற கூரிய ஸமுத்ரமென்ன பூவை, Puvai - பூவைப்பூவென்ன காயா, Kaya - காயாம்பூவென்ன போது அவிழ் நீலம், Pothu Avaizhi Nilam - காலத்திலே அலர்ந்த கருநெய்தற்பூவென்ன புனைந்த மேகம், Punaindha Megam - அழகிய மேகமென்ன அங்ஙனம் போன்ற இவர் தாம், Annanam Ponda Ivar Tham - இவற்றைப் போலேயிருக்கிற இவர் |