திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1120 | பெரிய திருமொழி || (2-8–திரிபுரம்) (திருவட்டபுயகரம்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (யுத்த உன்முகமாய் இருக்கிற குவலயாபீடத்தை முடிக்கும்படியாக நிறத்துக்கு பரபாகமான வெண்மையை உடைய கொம்பை பறித்து இருண்ட மேகம் போலே இருக்கிற இவர் ஆர் தான் என்ன மேல் வார்த்தை – கம்ச ப்ரேரிதமான குவலையா பீடத்தை நிரசித்து கம்சன் படைவீட்டில் பெண்கள் பயத்தைப் போக்கின அவ்வளவே அல்ல உன் பயம் தீர்க்கைகாக வந்து நிற்கிறவன் நான் என்கிறார் மூன்றாம் பாசுரத்தில்) 3 | செம்பொ னிலங்கு வலங்கைவாளி திண்சிலை தண்டொடு சங்கமொள்வாள்,
உம்ப ரிருசுட ராழியோடு கேடக மொண்மலர் பற்றியெற்றே,
வெம்பு சினத்தடல் வேழம்வீழ வெண்மருப் பொன்று பறித்து,இருண்ட
அம்புதம் போன்றிவ ரார்க்கொலென்ன அட்ட புயகரத் தேனென்றாரே. –2-8-3 | பதவுரை Show / Hideவலம் கை, Valam Kai - வலத்திருக்கைpயலே (- (அட்டபுயகரத்தேன் என்றார்-.) (எற்றே!–; இது என்ன ஆச்சரீயம்!..)) இலங்கு, Ilangu - விளங்குகின்ற செம் பொன், Sem Pon - பசும்பொன்னாற் செய்யப்பட்ட வாளி, Vaali - அம்புகளையும் திண் சிலை, Thin Silai - திண்ணிதான சார்ங்க வில்லையும் தண்டொடு, Thandodu - கௌமோதகி யென்னும் கதையையும் சங்கம், Sangam - ஸ்ரீ பாஞ்சஜந்யத்தையும் ஒள் வாள், Ol Vaal - அழகிய நந்தவகவாளையும், உம்பர், Umbar - (ஆயதங்களெல்லா வற்றினும்) மேற்பட்டு இரு சுடர், Iru Sudar - மிக்க தேஜஸ்ஸையுடைய ஆழியோடு, Azhiyodu - திருவாழியாழ்வானையும் கேடகம், Kedagam - கேடயத்தையும் ஒண் மலர், On Malai - அழகிய புஷ்பத்தையும் பற்றி, Patri - தரித்துக்கொண்டு, வெம்பு சினத்து அடல் வேழம் வீழ, Vembu Sinathu Adal Vezham Veel - மிக்க கோபத்தையும் மிடுக்கையுமுடைய குவலய பீடமென்னும் யானை முடியும் படியாக வெண் மருப்பு ஒன்று, Ven Maruppu Ondru - (அவ்யானையினுடைய) வெளுத்த ஒரு கொம்பை பறித்து, Parithu - பிடுங்கிக் கையிலே கொண்டு இருண்ட அம்புதம் போன்ற இவர் ஆர் கொல் என்ன, Irunda Ambudham Ponda Ivar Ar Kol Enna - காளமேகத்தை ஒத்திருக்கின்ற இவர் யார்? என்று நான் கேட்க |