திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1112 | பெரிய திருமொழி || (2-7–திவளும்) (திருவிடவெந்தை) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (உகவாதார் முன்பே நம்முடையார் நோவுபட விட்டுப் பார்த்திருக்குமது நமக்கு போராது என்று இருக்கக் கடவ நீர் இவளிடை யாட்டத்தில் நினைந்து இருந்தது என் – ஸ்ரீ வைகுண்ட நாதனுக்கு ஆகில் போரும் என்னவுமாம் –இப்படி கைவிட்டு இருக்குமது உமக்கு போராது- என்கிறார் ஐந்தாம் பாசுரத்தில்) 5 | ஓதிலும் உன்பே ரன்றிமற் றோதாள் உருகும்நின் திருவுரு நினைந்து,
காதன்மை பெரிது கையற வுடையள் கயல்நெடுங் கண்துயில் மறந்தாள்,
பேதையேன் பேதை பிள்ளைமை பெரிது தெள்ளியள் வள்ளிநுண் மருங்குல்,
ஏதலர் முன்னா என்னினைந் திருந்தாய் இடவெந்தை யெந்தை பிரானே. –2-7-5 | பதவுரை Show / Hideஓதிலும், Othilum - (இம்மகள்) வாய்விட்டு எதைச் சொன்னாலும் (- (இடவெந்தை யெந்தை பிரானே!- ;) (அவமானப்படுத்துவாயோ, பஹி மானப்படுத்துவாயோ?)) உன் பேர் அன்றி, Un Per Andri - உனது திருநாமம் தவிர மற்று, Mattru - வேறொன்றையும் ஓதாள், Othaal - சொல்லுகின்றிலள்; நின் திருஉரு நினைந்து உருகும், Nin Thiruuru Ninaindhu Urugum - உனது திருமேனியைச் சிந்தித்து உருகினபடியே யிராநின்றாள்; காதன்மை பெரிது, Kaadhamai Peridhu - (உன் விஷயத்தில் இவளுக்கு) ஆசை பெருகுகின்றது; கையறவு உடையள், Kaiyaravu Udaiyal - ஒன்றும் செய்யமாட்டாதே யிராநின்றாள்; கயல் நெடு கண் துயில் மறந்தாள், Kayal Nedhu Kan Thuyil Marandhaal - கயல்மீன் போன்று நீண்ட கண்களிலே உறக்கத்தை மறந்துவிட்டாள்; பேதையேன் பேதை, Pethaien Pethai - அறிவு கெட்டவளான என்னுடைய இப்பெண்பிள்ளை பிள்ளைமை பெரிது, Pillaimai Peridhu - மிகவும் இளம்பிராயமாயிருக்கச் செய்தேயும் தெள்ளியள், Thelliyal - (உனது ஸ்வரூ பகுணங்களிலே) தெளிவுள்ளவளா யிரா நின்றாள்; வள்ளி நுண் மருங்குல், Valli Nun Marungul - கொடி போன்று நுட்பமான இடையையுடைய இம்மகளைப்பற்றி ஏதலர் முன்னா, Aedhalar Munnai - சத்துரக்கள் முன்பாக என் நினைந்திருந்தாய், En Ninaindhirundhai - என்ன செய்வதாகத் திருவுள்ளம்? |