திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 1081 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
1081பெரிய திருமொழி || (2-4–அன்றாயர்) (திருநீர்மலை) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (தான் ஸ்வாமியான முறை தோற்ற இருக்குமாகில் அவர்களோடும் பொருந்த ஒண்ணாது இறே- அதுக்காக தன்னைத் தாழ விட்டு அவர்களோடு உறவு பண்ணி கலந்து –த்ரௌபதி உடைய ஸ்த்ரீத்வத்தை பரிஹரித்தவனுக்கு வாஸ ஸ்தானம்–என்கிறார் நாலாம் பாசுரத்தில்) 4
தாங்காததோ ராளரி யாயவுணன் – றனைவீட முனிந்தவ னாலமரும், பூங்கோதையர் பொங்கெரி மூழ்கவிளைத் ததுவன்றியும் வென்றிகொள் வாளமரில், பாங்காகமுன் ஐவரொ டன்பளவிப் பதிற்றைந்திரட் டிப்படை வேந்தர்பட, நீங்காச்செரு வில்நிறை காத்தவனுக் கிடம்மாமலை யாவது நீர்மலையே. –2-4-4
பதவுரை Show / Hide
தாங்காதது, Thangadhadhu - எதிரிகளுக்கு ஸஹிக்கமுடியாத
ஓர் ஆளி அரி ஆய், Oru Aali Ari Aay - ஒப்பற்ற நரசிங்க மூர்த்தியாய்த் தோன்றி
அவுணன் தனை, Avunan Thanai - (ஹிரண்யனென்னும்) அஸூரனை
வீட முனிந்து, Veeda Muninthu - முடியுமாறு சீறி,
அவனால் அமரும், Avanal Amarum - அவ்விரணியனால் நிலைபெற்றிருந்த
பூங்கோதையர், Poongothaiyar - பெண்டுகள்
பொங்கு எரி மூழ்க, Pongu Eri Moongka - எரிகிற நெருப்பிலே புகும்படி
விளைத்து, Vilaitthu - செய்தவனாயும்
அது அன்றியும், Adhu Andriyum - அதுவுமல்லாமல்,
முன், Mun - முன்னே
வென்றி கொள் வாள் அமரில், Vendri Kol Vaal Amiril - வெற்றியையுடைய பெரிய போர்க்களத்திலே
ஐவரொடு, Aivarodu - பஞ்சபாண்டவர்களோடே
பாங்கு ஆக அன்பு அளவி, Paangu Aaga Anbu Alavi - அவர்களுக்குத் தக்கபடி உறவு பண்ணிக் கலந்து,
படை, Padai - ஆயுதங்களை யுடையவர்களான
பதிற்றைந் திரட்டி வேந்தர் பட, Pathirrain Thiratti Vendar Pada - நூற்றுவரான துரியோதனாதிகள் முடிந்துபோம்படி செய்தவனாயும்
நீங்கா செருவில், Neenga Seruvil - மாளாத அப்பெரும் பூசலினாலே
நிறை, Nirai - (த்ரௌபதியின்) நலத்தை
காத்தவனுக்கு, Kaathavanukku - ரக்ஷித்தவனாயுமுள்ள ஸர்வேச்வரனுக்கு