திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1081 | பெரிய திருமொழி || (2-4–அன்றாயர்) (திருநீர்மலை) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (தான் ஸ்வாமியான முறை தோற்ற இருக்குமாகில் அவர்களோடும் பொருந்த ஒண்ணாது இறே- அதுக்காக தன்னைத் தாழ விட்டு அவர்களோடு உறவு பண்ணி கலந்து –த்ரௌபதி உடைய ஸ்த்ரீத்வத்தை பரிஹரித்தவனுக்கு வாஸ ஸ்தானம்–என்கிறார் நாலாம் பாசுரத்தில்) 4 | தாங்காததோ ராளரி யாயவுணன் – றனைவீட முனிந்தவ னாலமரும்,
பூங்கோதையர் பொங்கெரி மூழ்கவிளைத் ததுவன்றியும் வென்றிகொள் வாளமரில்,
பாங்காகமுன் ஐவரொ டன்பளவிப் பதிற்றைந்திரட் டிப்படை வேந்தர்பட,
நீங்காச்செரு வில்நிறை காத்தவனுக் கிடம்மாமலை யாவது நீர்மலையே. –2-4-4 | பதவுரை Show / Hideதாங்காதது, Thangadhadhu - எதிரிகளுக்கு ஸஹிக்கமுடியாத ஓர் ஆளி அரி ஆய், Oru Aali Ari Aay - ஒப்பற்ற நரசிங்க மூர்த்தியாய்த் தோன்றி அவுணன் தனை, Avunan Thanai - (ஹிரண்யனென்னும்) அஸூரனை வீட முனிந்து, Veeda Muninthu - முடியுமாறு சீறி, அவனால் அமரும், Avanal Amarum - அவ்விரணியனால் நிலைபெற்றிருந்த பூங்கோதையர், Poongothaiyar - பெண்டுகள் பொங்கு எரி மூழ்க, Pongu Eri Moongka - எரிகிற நெருப்பிலே புகும்படி விளைத்து, Vilaitthu - செய்தவனாயும் அது அன்றியும், Adhu Andriyum - அதுவுமல்லாமல், முன், Mun - முன்னே வென்றி கொள் வாள் அமரில், Vendri Kol Vaal Amiril - வெற்றியையுடைய பெரிய போர்க்களத்திலே ஐவரொடு, Aivarodu - பஞ்சபாண்டவர்களோடே பாங்கு ஆக அன்பு அளவி, Paangu Aaga Anbu Alavi - அவர்களுக்குத் தக்கபடி உறவு பண்ணிக் கலந்து, படை, Padai - ஆயுதங்களை யுடையவர்களான பதிற்றைந் திரட்டி வேந்தர் பட, Pathirrain Thiratti Vendar Pada - நூற்றுவரான துரியோதனாதிகள் முடிந்துபோம்படி செய்தவனாயும் நீங்கா செருவில், Neenga Seruvil - மாளாத அப்பெரும் பூசலினாலே நிறை, Nirai - (த்ரௌபதியின்) நலத்தை காத்தவனுக்கு, Kaathavanukku - ரக்ஷித்தவனாயுமுள்ள ஸர்வேச்வரனுக்கு |