திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 1062 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
1062பெரிய திருமொழி || (2-2–காசையாடை) (திருஎவ்வுளூர்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (பரிமள பிரசுரமான பர்யந்தத்தை உடைத்தான தேசத்தில் அரியது செய்ய வல்லவன் ஆயிற்று கண் வளர்ந்து அருளுகிறான் -எழுப்பி கார்யம் கொள்வார் குறையே –என்கிறார் ஐந்தாம் பாசுரத்தில்) 5
பால நாகி ஞாலமேழு முண்டுபண் டாலிலைமேல், சால நாளும் பள்ளிகொள்ளும் தாமரைக் கண்ணன் எண்ணில், நீல மார்வண் டுண்டுவாழும் நெய்தலந் தண்கழனி, ஏல நாறும் பைம்புறவி லெவ்வுள் கிடந்தானே. –2-2-5
பதவுரை Show / Hide
பண்டு, Pandhu - முன்பொரு காலத்தில்
பாலன் ஆகி ஞாலம் ஏழும் உண்டு, Paalan Aagi Nyaalam Ezhum Undu - சிறு குழந்தையாய் உலகங்களை யெல்லாம் திரு வயிற்றிலே வைத்து
ஆல் இலை மேல், Aal Ilai Mael - ஆலந்தளிரின் மேலே
சால நாளும், Saal Naalum - வெகு நாள் வரையில்
பள்ளி கொள்ளும், Palli Kollum - சயனித்திருந்த
தாமரை கண்ணன், Thamarai Kannan - புண்டரீகாக்ஷன்,
எண் இல் நீலம்;, En Il Neelam - எண்ணிறந்த நெய்தற் பூவிலே
ஆர், Aar - படிந்த
வண்டு, Vandu - வண்டுகள்
உண்டு, Undu - (அப்பூக்களிலுள்ள தேனைப்)பருகி
வாழும், Vaalum - வாழப்பெற்ற
அம் தண், Am Than - அழகிய குளிர்ந்த
நெய்தல் கழனி, Neithal Kazhani - நெய்தல் கழனிகளையும்
ஏலம் நாறும், Elam Naarum - பரிமளம் கமழ்கின்ற
பை புறவில், Pai Puravil - பரந்த சோலைகளையுமுடைய
எவ்வுள், Evvul - திருவெவ்வுளூரிலே
கிடந்தான், Kidandhaan - சயனித்திருப்பவன்.