திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 1058 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
1058பெரிய திருமொழி || (2-2–காசையாடை) (திருஎவ்வுளூர்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (அறிவுடையார் -ராமோ ராமோ ராம -என்னத்-தன் பக்கல் நசை உடையார்கள் இப்படி ஏச – இவை இரண்டையும் கேட்டு-திரு வெவ்வுளிலே கண் வளர்ந்தான் ஆயிற்று-என்கிறார் முதல் பாசுரத்தில்) 1
காசை யாடை மூடியோடிக் காதல்செய் தானவனூர், நாச மாக நம்பவல்ல நம்பி நம்பெருமான், வேயி னன்ன தோள்மடவார் வெண்ணெயுண் டானிவனென்று ஏச நின்ற வெம்பெருமா னெவ்வுள் கிடந்தானே. –2-2-1
பதவுரை Show / Hide
காசை ஆடை, Kaasai Aadai - காஷாய வஸ்த்ரத்தினால்
மூடி, Moodi - உடம்பை மறைத்துக்கொண்டு
ஓடி, Oodi - (பஞ்சவடிக்கு) ஓடிவந்து
காதல் செய்தானவன், Kaadhal Seithaanavan - (பிராட்டியிடத்தில்) ஆசை கொண்டவனான இராவணனுடைய
ஊர், Oor - ஊராகிய இலங்கையானது
நாசம் ஆக நம்ப வல்ல, Naasam Aaga Namba Valla - நாசமாகும்படி ஸங்கல்பித்த
நம்பி, Nambi - பரிபூர்ண சக்தியையுடையவனும்
நம்பெருமான், Namberumaan - நமக்கு ஸ்வாமியும்
வேயின் அன்னதோள் மடவார், Veiyin Annathol Madavaar - மூங்கிலோடு ஒத்த தோள்களையுடைய இடைச்சியர்
இவன் வெண்ணெய் உண்டான் என்று ஏச நின்ற எம்பெருமான, Ivan Vennai Undaan Endru Aesa Nindra Emperumaan - ‘இவன் வெண்ணெய் திருடி உண்டவன்’ என்று சொல்லிப்பரிஹஸிக்கும்படி நின்றவனுமான எம்பெருமான்
எவ்வுள் கிடந்தான், Evval Kidanthaan - திருவெவ்வுளூரில் திருக்கண் வளர்ந்தருளா நின்றான்.