Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை , மற்றும் சில தொகுப்பில் ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை, ஸ்ரீ நம்பிள்ளை அவர்களின் அவதாரிகை உள்ளடங்கியது.

Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See நாலாயிர திவ்யப்ரபந்தப் பாசுரங்களின் அடைவு for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை | திவ்யப்ரபந்தம்-எண்ணிக்கை | நாலாயிர திவ்யப்ரபந்தப் பாசுரங்களின் அடைவு | திவ்யதேசம் -ஆழ்வார் -பாசுர எண்ணிக்கை அட்டவணை

Search Results for: 996 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
996பெரிய திருமொழி || (கலையும் கரியும்) - -(திருச்சாளக்கிராமம்) (“ஒழிவில் காலமெல்லாமுடனாய் மன்னி வழுவிலாவடிமை செய்ய வேண்டும் நாம்” என்று இடைவிடாது கைங்கரியம் பண்ணப்பாரித்திருக்கின்ற ஸ்ரீ வைஷ்ணவர்களின் கோஷ்டி ஒரு பக்கத்திலும்,) 9
தொண்டாம் இனமும் இமையோரும் துணை நூல் மார்பில் அந்தணரும்
அண்டா வெமக்கே யருளாய் என்று அணையும் கோயிலருகெல்லாம்
வந்தார் பொழிலின் பழனத்து வயலினயலே கயல் பாய
தன்டாமரைகள் முக மலர்த்தும் சாளக்கிராமம் அடை நெஞ்சே –1-5-9
தொண்டு ஆம் இனமும், Thondu Aam Inamum - தொண்டு செய்பவர்களான பாகவதர்களுடைய ஸமூஹமும்
இமையோரும், Imaiyorum - நித்யஸூரிகளும்
துணை நூல் மார்வில் அந்தணரும், Thunai Nool Maarvil Andhanarum - யஜ்ஞோபவீதத்தோடு கூடின மார்வையுடைய பிராமணர்களும்
அண்டா எமக்கே அருளாய் என்று அணையும்கோயில், Andaa Emakke Arulaai Endru Anaiyumkoil - ‘தேவனே, எங்களுக்கே அருள் புரிய வேணும்’ என்று சொல்லிக்கொண்டு வந்து சேர்ந்து நிற்கிற கோவிலாயும்,
அருகு எல்லாம், Arugu Ellam - சுற்றுப்பிரதேசங்களெங்கும்
வண்டு ஆர் பொழிலின் பழனத்து, Vandu Aar Pozhilin Pazhanathu - வண்டுகள் நிறைந்திருக்கப்பெற்ற சோலைகளிலுண்டான நீர்நிலங்களில்
வயலின் அயலே கயல் பாய, Vayalin Aayale Kayal Paaya - கழனிகளிடத்துள்ள கயல் மீன்கள் வந்து துள்ள
தண்தாமரைகள் முகம்மலர்த்தும், Thanthaamaraigal Mukhammalarthum - குளிர்ந்ததாமரை மொக்குகள் முகம் விகஸிக்கப் பெற்றதாயுமுள்ள
சாளக்கிராமம், Saalakkiraamam - ஸாளக்ராமத்தை