Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை , மற்றும் சில தொகுப்பில் ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை, ஸ்ரீ நம்பிள்ளை அவர்களின் அவதாரிகை உள்ளடங்கியது.

Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See நாலாயிர திவ்யப்ரபந்தப் பாசுரங்களின் அடைவு for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை | திவ்யப்ரபந்தம்-எண்ணிக்கை | நாலாயிர திவ்யப்ரபந்தப் பாசுரங்களின் அடைவு | திவ்யதேசம் -ஆழ்வார் -பாசுர எண்ணிக்கை அட்டவணை

Search Results for: 995 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
995பெரிய திருமொழி || (கலையும் கரியும்) - -(திருச்சாளக்கிராமம்) (வெந்தாரென்பும்.) சிவபிரானுடைய ஆபரணங்களையும் அலங் காரங்களையும் பேசுகிறார். 8
வெந்தார் என்பும் சுடு நீரும் மெய்யில் பூசிக் கையகத்து ஓர்
சந்தார் தலை கொண்டு உலகு ஏழும் திரியும் பெரியோன் தான் சென்று என்
எந்தாய் சாபம் தீர் என்ன இலங்கமுது நீர் திரு மார்வில்
தந்தான் சந்தார் பொழில் சூழ்ந்த சாளக்கிராமம் அடை நெஞ்சே –1-5-8
வெந்தார் என்பும், Venthaar Enbum - செத்து வெந்துபோன ப்ரேதங்களின் எலும்புகளையும்
சுடு நீறும், Sudu Neerum - சுட்ட சாம்பலையும்
மெய்யில் பூசி, Meiyyil Poosi - சரீரத்தில் தரித்துக்கொண்டு
சந்து ஆர் ஓர் தலைகையகத்து கொண்டு, Sandhu Aar Oor Thalaikayakththu Kondu - சந்துகள் நிறைந்த ஒரு மண்டையோட்டைக் கையிலே எடுத்துக்கொண்டு
உலகு ஏழும் திரியும், Ulagu Ezhum Thiriyum - எல்லாவுலகங்களிலும் திரிந்தவனான
பெரியோன் தான், Periyoon Thaan - பரமசிவன்
சென்று, Senru - கிட்டவந்து
என் எந்தாய் சாபம் தீர் என்ன, En Endhai Saapam Theer Enna - ‘என் ஸ்வாமீ!, (எனக்கு நேர்ந்திருக்கிற) சாபத்தை நீக்கியருள வேணும்’  என்று பிரார்த்திக்க,
திருமார்பில் இலங்கு அமுதம் நீர் தந்தான், Thirumaarbil Ilangu Amudham Neer Thandhaan - தனது திருமார்பில் விளங்குகின்ற அம்ருத ஜலத்தை  அளித்தவனான எம்பெருமான்
சந்து ஆர் பொழில் சூழ்ந்த சாளக்கிராமம், Sandhu Aar Pozhil Soozhntha Saalakkiraamam - சந்தனமரங்கள் நிறைந்த சோலைகள் சூழ்ந்த ஸாளக்ராமத்தை