| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 994 | பெரிய திருமொழி || (கலையும் கரியும்) - -(திருச்சாளக்கிராமம்) (ஏனோரஞ்ச வெஞ்சமத்துள்.) கீழ்ப்பாட்டில் ”உலகேழும் தாயான் என்று ஸர்வலோக வ்யாபகத்வம் சொன்னவுடனே, முன்பு ப்ரஹ்லாதன் எம்பெருமான் ஸர்வ வ்யாபகன் என்று சொன்னதும் இரணியன் அதை மறுத்துச் சொன்னதும் முதலிய கதைகள் நினைவுக்கு வந்து ஹிரண்ய வத வ்ருத்தாந்தத்தை அருளிச் செய்கிறாரிதில். 7 | ஏனோர் அஞ்ச வெஞ்சமத்துள் அரியாய்ப் பாரிய விரணியனை ஊனார கலம் பிளவெடுத்த ஒருவன் தானே யிரு சுடராய் வானாய்த் தீயாய் மாருதமாய் மலையாய் அலை நீர் உலகனைத்தும் தானாய் தானுமானான் தன் சாளக்கிராமம் அடை நெஞ்சே –1-5-7 | ஏனோர் அஞ்ச, Eynoor Anja - சத்துருக்களான அசுரர்கள் பயப்படும்படியாக அரி ஆய், Ari Aay - நரசிங்கமூர்த்தியாகி பரிய இரணியனை, Pariya Iraniyanai - தடித்த சரீரத்தை யுடையனான ஹிரண்யனை வெம் சமத்துள், Vem Samaththul - கடுமையான போர்க்களத்திலே ஊன் ஆர் அகலம் பிளவு எடுத்தஒருவன், Oon Aar Akalam Pilavu Eduththoruvan - மாம்ஸம் நிறைந்த மார்பு கிழியும்படி செய்த வொருவனும், தானே, Thaaney - இப்படி செய்தருளினவன் தானே இரு சுடர்ஆய், Iru Sudar Aay - சந்த்ர ஸூர்யர்களாயும் வான் ஆய், Vaan Aay - ஆகாசமாயும் தீ ஆய், Thee Aay - அக்நியாயும் மாருதம் ஆய், Maarudham Aay - காற்றாயும் மலை ஆய், Malai Aay - மலைகளாயும் அலை நீர் உலகு அனைத்தும் தான் ஆய், Alai Neer Ulagu Anaiththum Thaan Aay - கடல் ஆழ்ந்த உலகங்கள் யாவுமாய் இருப்பவனும் தானும் ஆனான் தன் சாளக்கிராமம், Thaanum Aanaan Than Chaalakkiraamam - அஸாதாரணமான திவ்யமங்கள விக்ரஹத்தையுடையனுமான எம்பெருமானுடைய ஸாளக்ராமத்தை |