Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை , மற்றும் சில தொகுப்பில் ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை, ஸ்ரீ நம்பிள்ளை அவர்களின் அவதாரிகை உள்ளடங்கியது.

Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See நாலாயிர திவ்யப்ரபந்தப் பாசுரங்களின் அடைவு for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை | திவ்யப்ரபந்தம்-எண்ணிக்கை | நாலாயிர திவ்யப்ரபந்தப் பாசுரங்களின் அடைவு | திவ்யதேசம் -ஆழ்வார் -பாசுர எண்ணிக்கை அட்டவணை

Search Results for: 994 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
994பெரிய திருமொழி || (கலையும் கரியும்) - -(திருச்சாளக்கிராமம்) (ஏனோரஞ்ச வெஞ்சமத்துள்.) கீழ்ப்பாட்டில் ”உலகேழும் தாயான் என்று ஸர்வலோக வ்யாபகத்வம் சொன்னவுடனே, முன்பு ப்ரஹ்லாதன் எம்பெருமான் ஸர்வ வ்யாபகன் என்று சொன்னதும் இரணியன் அதை மறுத்துச் சொன்னதும் முதலிய கதைகள் நினைவுக்கு வந்து ஹிரண்ய வத வ்ருத்தாந்தத்தை அருளிச் செய்கிறாரிதில். 7
ஏனோர் அஞ்ச வெஞ்சமத்துள் அரியாய்ப் பாரிய விரணியனை
ஊனார கலம் பிளவெடுத்த ஒருவன் தானே யிரு சுடராய்
வானாய்த் தீயாய் மாருதமாய் மலையாய் அலை நீர் உலகனைத்தும்
தானாய் தானுமானான் தன் சாளக்கிராமம் அடை நெஞ்சே –1-5-7
ஏனோர் அஞ்ச, Eynoor Anja - சத்துருக்களான அசுரர்கள் பயப்படும்படியாக
அரி ஆய், Ari Aay - நரசிங்கமூர்த்தியாகி
பரிய இரணியனை, Pariya Iraniyanai - தடித்த சரீரத்தை யுடையனான ஹிரண்யனை
வெம் சமத்துள், Vem Samaththul - கடுமையான போர்க்களத்திலே
ஊன் ஆர் அகலம் பிளவு எடுத்தஒருவன், Oon Aar Akalam Pilavu Eduththoruvan - மாம்ஸம் நிறைந்த மார்பு கிழியும்படி செய்த வொருவனும்,
தானே, Thaaney - இப்படி செய்தருளினவன் தானே
இரு சுடர்ஆய், Iru Sudar Aay - சந்த்ர ஸூர்யர்களாயும்
வான் ஆய், Vaan Aay - ஆகாசமாயும்
தீ ஆய், Thee Aay - அக்நியாயும்
மாருதம் ஆய், Maarudham Aay - காற்றாயும்
மலை ஆய், Malai Aay - மலைகளாயும்
அலை நீர் உலகு அனைத்தும் தான் ஆய், Alai Neer Ulagu Anaiththum Thaan Aay - கடல் ஆழ்ந்த உலகங்கள் யாவுமாய் இருப்பவனும்
தானும் ஆனான் தன் சாளக்கிராமம், Thaanum Aanaan Than Chaalakkiraamam - அஸாதாரணமான திவ்யமங்கள விக்ரஹத்தையுடையனுமான எம்பெருமானுடைய ஸாளக்ராமத்தை