| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 991 | பெரிய திருமொழி || (கலையும் கரியும்) - -(திருச்சாளக்கிராமம்) (‘ஊரகம்’ என்கிற சொல் ஊர் என்று விகாரப்பட்டதாகக்கொண்டு ஊரகமென்கிற திவ்ய தேசத்தைத் தனக்கு இருப்பிடமாகவுடையவன் என்று பொருளுரைப்பது ஒருவழி.) 4 | ஊரான் குடந்தை யுத்தமன் ஒரு கால் இரு கால் சிலை வளைய தேரா வரக்கர் தேர் வெள்ளம் செற்றான் வற்றா வரு புனல் சூழ் பேரான் பேர் ஆயிரம் உடையான் பிறங்கு சிறை வண்டறைகின்ற தாரான் தாரா வயல் சூழ்ந்த சாளக்கிராமம் அடை நெஞ்சே –1-5-4 | ஊரான், Ooraan - திருவூரகமென்னும் திவ்யதேசத்தை இருப்பிடமாகவுடையவனும் குடைந்தை உத்தமன், Kudaindhai Uththaman - திருக்குடைந்தையிலே எழுந்தருளியிருக்கிற புருஷோத்தமனும், ஒருகால், Orukaal - முன்னொரு காலத்தில் சிலை இருகால் வளையதேரா அரக்கர் தேர் வெள்ளம் செற்றான், Silai Irukaal Valaiyathera Arakkar Ther Vellam Setraan - வில்லினுடைய இரண்டு நுனிகளையும் வளைத்து அவிவேகிகளான ராக்ஷஸர்களுடைய சேனைத் தொகையைச் சிதைத்தவனும் வற்றா வருபுனல் சூழ் பேரான், Vatraa Varupunal Soozh Peraan - ஒருநாளும் வற்றாமல் மேன்மேலும் பெருகி வருகின்ற காவிரிநீர் சூழ்ந்த திருப்பேர்நகரில் கண்வளர்ந்தருள்பவனும் பேர்ஆயிரம் உடையான், Peraayiram Udaiyaan - ஸஹஸ்ரநாமங்களை யுடையவனும் பிறங்கு சிறை வண்டு அறைகின்ற தாரான், Pirangu Sirai Vandu Araikindra Thaaran - நெருங்கி யிருக்கிற சிறகுகளை யுடைய வண்டுகள் ஆரவாரிக்கின்ற (திருத்துழாய்) மாலையையுடை யவனுமான எம்பெருமான் தாரா வயல் சூழ்ந்த சாளக்கிராமம், Tharaa Vayal Soozhntha Saalakkiraamam - தாரா என்னும் நீர்ப்பறவைகள் நிறைந்திருக்கிற வயல்களாலே சூழப்பட்ட ஸ்ரீஸாளக்ராமத்தை |