Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை , மற்றும் சில தொகுப்பில் ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை, ஸ்ரீ நம்பிள்ளை அவர்களின் அவதாரிகை உள்ளடங்கியது.

Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See நாலாயிர திவ்யப்ரபந்தப் பாசுரங்களின் அடைவு for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை | திவ்யப்ரபந்தம்-எண்ணிக்கை | நாலாயிர திவ்யப்ரபந்தப் பாசுரங்களின் அடைவு | திவ்யதேசம் -ஆழ்வார் -பாசுர எண்ணிக்கை அட்டவணை

Search Results for: 990 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
990பெரிய திருமொழி || (கலையும் கரியும்) - -(திருச்சாளக்கிராமம்) (பண்டைநான் மறையும் வேள்வியும் கேள்விப் பதங்களும் பதங்களின் பொருளும், பிண்டமாய்விரிந்த பிறங்கொளியனலும் பெருகிய புனலொடு நிலனும், கொண்டல் மாருதமும் குரைகடலேழும் ஏழுமாமலைகளும் விசும்பும், அண்டமுந்தானாய் நின்ற வெம்பெருமான் -(பெரிய திருமொழி 5-7-1) என்னுமா போலே ஜகத்ஸ்வரூபியாய் நிற்கும் நிலையைச் சொல்லுகிறார் ஒன்றரையடிக ளால்.) 3
உலவு திரையும் குல வரையும் ஊழி முதலா வெண் திக்கும்
நிலவும் சுடரும் இருளுமாய் நின்றான் வென்றி விரலாழி
வலவன் வானோர் தம் பெருமான் மருவா வரக்கர்க்கு எஞ்ஞான்றும்
சலவன் சலம் சூழ்ந்து அழகாய சாள்க்கிராமம் அடை நெஞ்சே –1-5-3
உலவு திரையும், Ulavuthiraiyum - உலாவுகின்ற அலைகளையுடைய கடலும்
குலம் வரையும், Kulam Varaiyum - குலபர்வதங்களும்
ஊழி முதலா எண்திக்கும், Oozhi Muthalaa Enthikkum - காலம் முதலாகவுள்ள ஸகலபதார் த்தங்களும் எட்டுத்திசைகளும்
நிலவும் சுடரும் இருளும் ஆய் நின்றான், Nilavum Sudarum Irulum Aay Nindraan - சந்திரனும் ஸூர்யனும் இருட்டும் ஆகிய இப்பொருள்களுக்கெல்லாம் அந்தர்யாமியாயிருப்பவனும்
வென்றி விறல், Vendri Viral - வெற்றியையும் மிடுக்கையுமுடைய
ஆழி வலவன், Aazhi Valavan - திருவாழியை வலத் திருக்கையிலே யுடையவனும்
வானோர் தம் பெருமான், Vaanoor Tham Perumaan - தேவாதிதேவனும்
மருவா அரக்கர்க்கு, Maruvaa Arakkarkku - (தன்னை) ஆச்ரயியாத ராக்ஷஸர்கள் விஷயத்தில்
எஞ்ஞான்றும் சலவன், Enjnjaanrum Salavan - எப்போதும் நன்மை செய்யாதவனுமாகிய எம்பெருமான் (எழுந்தருளியிருக்குமிடமாய்)
சலம் சூழ்ந்து அழகு ஆய, Salam Soozhndhu Azhagu Aay - நீர் நிலங்களால் சூழப்பட்டு அழகு பொருந்தியதான