| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 990 | பெரிய திருமொழி || (கலையும் கரியும்) - -(திருச்சாளக்கிராமம்) (பண்டைநான் மறையும் வேள்வியும் கேள்விப் பதங்களும் பதங்களின் பொருளும், பிண்டமாய்விரிந்த பிறங்கொளியனலும் பெருகிய புனலொடு நிலனும், கொண்டல் மாருதமும் குரைகடலேழும் ஏழுமாமலைகளும் விசும்பும், அண்டமுந்தானாய் நின்ற வெம்பெருமான் -(பெரிய திருமொழி 5-7-1) என்னுமா போலே ஜகத்ஸ்வரூபியாய் நிற்கும் நிலையைச் சொல்லுகிறார் ஒன்றரையடிக ளால்.) 3 | உலவு திரையும் குல வரையும் ஊழி முதலா வெண் திக்கும் நிலவும் சுடரும் இருளுமாய் நின்றான் வென்றி விரலாழி வலவன் வானோர் தம் பெருமான் மருவா வரக்கர்க்கு எஞ்ஞான்றும் சலவன் சலம் சூழ்ந்து அழகாய சாள்க்கிராமம் அடை நெஞ்சே –1-5-3 | உலவு திரையும், Ulavuthiraiyum - உலாவுகின்ற அலைகளையுடைய கடலும் குலம் வரையும், Kulam Varaiyum - குலபர்வதங்களும் ஊழி முதலா எண்திக்கும், Oozhi Muthalaa Enthikkum - காலம் முதலாகவுள்ள ஸகலபதார் த்தங்களும் எட்டுத்திசைகளும் நிலவும் சுடரும் இருளும் ஆய் நின்றான், Nilavum Sudarum Irulum Aay Nindraan - சந்திரனும் ஸூர்யனும் இருட்டும் ஆகிய இப்பொருள்களுக்கெல்லாம் அந்தர்யாமியாயிருப்பவனும் வென்றி விறல், Vendri Viral - வெற்றியையும் மிடுக்கையுமுடைய ஆழி வலவன், Aazhi Valavan - திருவாழியை வலத் திருக்கையிலே யுடையவனும் வானோர் தம் பெருமான், Vaanoor Tham Perumaan - தேவாதிதேவனும் மருவா அரக்கர்க்கு, Maruvaa Arakkarkku - (தன்னை) ஆச்ரயியாத ராக்ஷஸர்கள் விஷயத்தில் எஞ்ஞான்றும் சலவன், Enjnjaanrum Salavan - எப்போதும் நன்மை செய்யாதவனுமாகிய எம்பெருமான் (எழுந்தருளியிருக்குமிடமாய்) சலம் சூழ்ந்து அழகு ஆய, Salam Soozhndhu Azhagu Aay - நீர் நிலங்களால் சூழப்பட்டு அழகு பொருந்தியதான |