Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை , மற்றும் சில தொகுப்பில் ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை, ஸ்ரீ நம்பிள்ளை அவர்களின் அவதாரிகை உள்ளடங்கியது.

Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See நாலாயிர திவ்யப்ரபந்தப் பாசுரங்களின் அடைவு for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை | திவ்யப்ரபந்தம்-எண்ணிக்கை | நாலாயிர திவ்யப்ரபந்தப் பாசுரங்களின் அடைவு | திவ்யதேசம் -ஆழ்வார் -பாசுர எண்ணிக்கை அட்டவணை

Search Results for: 982 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
982பெரிய திருமொழி || (ஏனம் முனாகி) - -(திருவதரியாச்சிராமம் ) (கீழ்ப்பாட்டில் “ அணிமலர்க்குழலாராம் பையர் துகிலும் ஆரமும் வாரிவந்து ” என்ற சொற்போக்கில் கண்ணபிரானுடைய திருவிளையாடல் ஆழ்வார்க்கு நினைவுக்கு வாவே, மற்றொரு க்ருஷ்ண சேஷ் டித்த்தை ஸ்மரித்துப்பேசுகிறார் இதில்) 5
பேய் இடைக்கிருந்து வந்த மற்றவள் பெரு முலை சுவைத்திட பெற்ற
தாய் இடைக்கிருத்தல் அஞ்சுவன் என்று தளர்ந்திட வளர்ந்த வென் தலைவன்
சேய் முகட்டுச்சி யண்டமும் சுமந்த செம் பொன் செய் விலங்கலில் இலங்கு
வாய் முகட்டிழிந்த கங்கையின் கரை மேல் வதரி யாச்சிரமத்துள்ளானே –1-4-5
வந்த, Vandha - (யசோதையின் வேஷங்கொண்டு)வந்தவளான
பேய், Pei - பூதனையினுடைய
இடைக்கு இருந்து, Idaikku Irundhu - இடுப்பிலேயிருந்துகொண்டு
அவள்தன், Avalthan - அப்பேய்மகளுடைய
பெரு முலை, Peru Mulai - பெரிய முலையை
சுவைத்திட, Suvaiththida - ருசிபார்த்து உண்ண
பெற்ற தாய், Petra Thaai - (அதைக்கண்ட) யசோதையானவள்
இடைக்கு இருத்தல்அஞ்சுவன் என்று தளர்ந்திட, Idaikku Iruththal Anjuvan Endru Thalarndhida - (‘நான் இனி இவனை) இடுப்பிலே எடுத்துக் கொள்ள அஞ்சுகிறேன்’ என்று சொல்லிக் கூசும்படியாக
வளர்ந்த, Valarntha - வளர்ந்தவனான
எம் தலைவன், Em Thalaivan - அஸ்மத் ஸ்வாமி
சேய் முகடு உச்சி, Seyy Mugadu Uchi - உயர்ந்த கொடுமுடியின் உச்சியிலே
அண்டம் சுமந்த, Andam Sumandha - அண்டத்தைச் சுமக்கிற
செம் பொன் செய்விலங்கலில், Sem Pon Seyvilangalil - மேரு பர்வதத்திலே
இலங்கு, Ilangu - விளங்குகின்ற
வாய்முகடு, Vaay Mugadu - விசாலமான சிகரத்தில் நின்றும்
முன் இழிந்த, Mun Izhintha - ப்ரவஹிக்கின்ற
கங்கையின், Gangaiyin - கங்கைநதியினுடைய
கரை மேல், Karai Mel - கரைமீதுள்ள
வதரியாச்சிராமத்து, Vathariyachiramatthu - ஸ்ரீபதரிகாச்ரமத்திலே
உள்ளான், Ullaan - எழுந்தருளியிருப்பவன்.